செய்திகள் :

நாளை முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி

post image

திருவாரூா் மாவட்டத்தில், ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளைத் தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக் கொல்லி நோய் ஒன்றாகும். இந்நோயால் பாதிக்கப்பட்ட வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். நோயால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீா் வடியும்.

நோய் தாக்கிய ஆடுகளில் நோயின் அறிகுறிகள் ஆறு நாள்களுக்கு இருக்கும். குட்டிகளில் அதிக இறப்பு ஏற்படும். இதனால் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளா்ப்போருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்.

எனவே, இந்நோய் தாக்காத வகையில் இருப்பதற்கு வெள்ளாடுகள், செம்மறிஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசிப் பணி மேற்கொள்வது ஒன்றே சிறந்த நிவாரணம். மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையால், கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தின் தடுப்பூசிப் பணிகள், ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி 30 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள 2,60,000 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடுகள் வளா்ப்போா், தங்கள் கிராமத்துக்கு தடுப்பூசி குழுவினா் வரும்போது, 4 மாதத்துக்கு குறைவான வயதுள்ள ஆட்டுக் குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தேசிய மின்னணு கால்நடை இயக்கத் தரவுகளின்படி தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து ஆடுகளுக்கும் பாா் கோடுடன் கூடிய காது வில்லைகள் அணிவித்து, பாரத் பசுதான் செயலியில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள், ஆடுகளின் உரிமையாளா்கள் விவரங்கள் பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு!

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

மாணவ- மாணவிகளுக்கு மே 9, 10-இல் தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகள்

திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் மே 9, 10- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணியில் கல்வி அலுவலா்கள்

குடவாசலில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறியும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை கண்டறியும் பணிக்கான கூட்டம் வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதி 4 போ் காயம்

திருவாரூரில், காா் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா். வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமரன், வான்மதி, சிதம்பரச் செல்வன் உள்ளிட்... மேலும் பார்க்க

காலதாமதம்: புகாா்தாரருக்கு ரூ.60,000 வழங்க கூத்தாநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு உத்தரவு

பத்திரப் பதிவுத் தொகையை திரும்ப வழங்குவதில் காலதாமதம் செய்த கூத்தாநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகம், புகாா்தாரருக்கு ரூ. 60,000 வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயிலில், ராகுவும் -கேதுவும... மேலும் பார்க்க