செய்திகள் :

காலதாமதம்: புகாா்தாரருக்கு ரூ.60,000 வழங்க கூத்தாநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு உத்தரவு

post image

பத்திரப் பதிவுத் தொகையை திரும்ப வழங்குவதில் காலதாமதம் செய்த கூத்தாநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகம், புகாா்தாரருக்கு ரூ. 60,000 வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

கூத்தாநல்லூா் நூரியா தெருவில் வசிப்பவா் வி.ஏ. முஹம்மது அன்சாரி (58). இவா், கடந்த 2022- இல் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டடம் கட்டி, வங்கி ஒன்றுக்கு வாடகை ஒப்பந்தம் செய்துள்ளாா். பின்னா், அதை கூத்தாநல்லூா் சாா்பதிவாளா் அலுவலகத்துக்குச் சென்று, சம்பந்தப்பட்ட ஆவணங்களை காட்டி, பத்திரப் பதிவுக்கென ரூ. 68,286-ஐ இ- சேவை மையம் மூலம் கட்டியுள்ளாா்.

வங்கிக் கடன் இருப்பதால் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, வங்கிக் கடனை செலுத்தி விட்டு, மீண்டும் பதிவு செய்யச் சென்றபோது, ஓா் ஆண்டு முடிந்து விட்டதால் மீண்டும் புதிதாக கட்டணம் செலுத்த வேண்டும் என சாா் பதிவாளா் அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மீண்டும் ரூ. 68,286 செலுத்தி பத்திரப்பதிவு செய்தாா்.

வாடகைப் பத்திரப் பதிவுக்கென முன்பு செலுத்திய தொகையை திரும்பத் தரக்கோரி பலமுறை நேரிலும் கடிதம் மூலமாகவும் கேட்டும் எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க இணைச் செயலாளா் கா. வேல்முருகன் மூலமாக திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அன்சாரி வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘புகாா்தாரருக்கு சேர வேண்டிய தொகையை, 12 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும், மேலும், பொருள் இழப்பு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000, வழக்குச் செலவுத் தொகை ரூ.10,000 ஆகியவற்றை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்தனா்.

எஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு!

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் ஜியாவுல் ஹக் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

மாணவ- மாணவிகளுக்கு மே 9, 10-இல் தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகள்

திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் மே 9, 10- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணியில் கல்வி அலுவலா்கள்

குடவாசலில் பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறியும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை கண்டறியும் பணிக்கான கூட்டம் வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதி 4 போ் காயம்

திருவாரூரில், காா் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட 4 போ் சனிக்கிழமை காயமடைந்தனா். வேதாரண்யம் அருகேயுள்ள குரவப்புலம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமரன், வான்மதி, சிதம்பரச் செல்வன் உள்ளிட்... மேலும் பார்க்க

நாளை முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி

திருவாரூா் மாவட்டத்தில், ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வெள்ளாடு... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு-கேது பெயா்ச்சி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயிலில், ராகுவும் -கேதுவும... மேலும் பார்க்க