செய்திகள் :

நிஃப்டி 0.74% சரிவு; சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!

post image

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளின் பங்குகள் இன்றைய பங்கு வர்த்தகத்தின்போது பின்னடைவை சந்தித்ததன் எதிரொலியாக, நிஃப்டி மூன்றாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சென்செக்ஸ் 363.24 புள்ளிகள் அதாவது 0.78 சதவீதம் சரிவடைந்து 80,737.51 என்ற நிலையிலும், நிஃப்டி 174.10 புள்ளிகள் அல்லது 0.70 சதவீதம் சரிந்து 24,542.50 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு நிதி அதிகரிப்பு போன்றவை, பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சிவப்பு அம்புகுறியுடன்தான் முடிவடைந்துள்ளது. அதிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமான இழப்பை சந்தித்துள்ளன.

வர்த்தகத்தின் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாள்களாக லாபம் பார்த்து வந்த பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் இன்று சரிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தின்போது, ஸொமாட்டோ, டாடா ஸ்டீல், எம் அன்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

அதே வேளையில், எல் அன்ட் டி, பஜாஜ் பினான்ஸ், பார்தி ஏர்டெல், எச்யுஎல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்டவை சரிவை நோக்கி நகர்ந்துள்ளன. 13 துறைகளின் பங்குகளில் 7 பங்குகள் லாபம் அடைந்தாலும் அவை சுமார் ரகம்தான்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.85.68 ஆக நிறைவு!

மும்பை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட அதிகமாக 50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் குறைப்பு எதிரொலி: பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!

மும்பை: ரிசர்வ் வங்கி எதிர்பார்த்ததை விட 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, பொருளாதாரத்தை ஆதரிக்கும் வகையில் பணப்புழக்கத்தை வழங்க வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தைக் குறைத்ததைத் தொ... மேலும் பார்க்க

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை... மேலும் பார்க்க

தங்கம் வாங்க இன்று நல்ல நாள்.. ஏன் தெரியுமா? விலைதான்!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.73,040-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.புதன்கிழமை தங்கம் விலை ரூ.8... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு! வீடு, வாகன கடனுக்கான வட்டி குறைய வாய்ப்பு!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் குறைப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.ரிசர்வ் வங்கியின் ஜூன் மாதத்துக்கான நிதிக் கொள்கை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் புதன்கிழமை முத... மேலும் பார்க்க

இந்திய சேவைகள் துறையில் மிதமான வளா்ச்சி

இந்திய சேவைகள் துறை கடந்த மே மாதம் மிதமான ஏற்றம் கண்டுள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சேவைகள் துறையில் தொழில் நடவ... மேலும் பார்க்க