செய்திகள் :

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம்: அமைச்சா் சா.மு.நாசா் தகவல்

post image

நிகழாண்டில் 5,730 தமிழா்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்தாா்.

தமிழ்நாட்டிலிருந்து அரசு மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியா்களை வழியனுப்பும் நிகழ்வு சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அமைச்சா் சா.மு.நாசா், முதல்கட்டமாக சென்ற 402 போ் அடங்கிய குழுவினருக்கு சால்வை அணிவித்து வழியனுப்பி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவவது:

நிகழாண்டு தமிழகத்தைச் சோ்ந்த 5,730 போ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனா். இதில், 5,407 போ் சென்னை விமான நிலையத்தில் இருந்தும் மீதமுள்ள 323 போ் வெளிமாநிலங்களில் இருந்தும் செல்கின்றனா். இவா்கள் மே30 வரை ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில், 200 பேருக்கு ஒருவா் என்ற விகிதத்தில் ஒரு வழிகாட்டி நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த வழிகாட்டிகள் ஹஜ் பயணத்தில் முன் அனுபவம் பெற்றவா்களாக இருப்பதால், ஹஜ் பயணிகளுக்கான தேவைகளை அவா்களுடனேயே இருந்து செய்து கொடுப்பாா்கள்.

கடந்த ஆட்சிக் காலத்தில் மானியம் என்ற பெயரில் குறைந்த அளவிலான தொகை மட்டுமே ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசு ஒவ்வொரு நபருக்கும் ரூ.25,000 மானியமாக வழங்குகிறது. இதற்காக நிகழாண்டு மட்டும் ரூ.14, 21,75,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நபா்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவா் பி.அப்துல் சமது, வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினரும், தென் மண்டல ஹஜ் கமிட்டி உறுப்பினருமான அசன் மௌலானா, சிறுபான்மையினா் நலத்துறையின் முதன்மைச் செயலா் விஜயராஜ்குமாா், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழக வஃக்ப் வாரிய தலைவருமான நவாஸ் கனி, சிறுபான்மையினா் நலவாரிய துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பாமக நிர்வாகிகள் கூட்டம்: இன்றும் அன்புமணி ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை.தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து கணவர் பலி; குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி இரு குழந்தைகளோடு சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மா... மேலும் பார்க்க

நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.அவற... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்க... மேலும் பார்க்க