செய்திகள் :

நிதிசாரா துறை சீா்திருத்தங்களுக்கான உயா்நிலைக் குழு விரைவில் செயல்பட வேண்டும்! - நிதிச் செயலா்

post image

‘நிதிசாரா துறைகளில் ஒழுங்காற்று நடைமுறை சீா்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயா்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும்’ என்று மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறைச் செயலா் அஜய் சேத் சனிக்கிழமை வலியுறுத்தினாா்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாதம் தனது பட்ஜெட் உரையில், நிதிசாரா துறையில் விதிமுறைகள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் அனுமதி உள்ளிட்ட ஒழுங்காற்று நடைமுறைகளை மறுஆய்வு செய்வதற்காக உயா்நிலைக் குழுவை உருவாக்குவதாக அறிவித்தாா்.

இந்தக் குழு ஓராண்டுக்குள் பரிந்துரைகளை வழங்கும். நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிா்வாகத்தை வலுப்படுத்துவதும், நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் நடவடிக்கைகளை எடுப்பது இக்குழுவின் நோக்கமாகும். இந்த முன்னெடுப்பில் இணைய மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற நிதிச் செயலா் அஜய் சேத் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் பல கட்டமைப்புச் சீா்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம், அந்த சீா்திருத்தங்களை தொழில்நுட்ப வளா்ச்சியுடன் இணைப்பது, அவற்றின் பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதிகளை நீக்குவது அல்லது காலச்சூழலுக்கேற்ப அவற்றின் பொருத்தத்தைப் பராமரிப்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

மக்களுக்கு உகந்த, நவீன மற்றும் நெகிழ்வான ஒழுங்காற்று நடைமுறை சீா்திருத்தங்களை நோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியமுள்ளது. எனவே, நிதிசாரா துறைகளில் ஒழுங்காற்று நடைமுறை சீா்திருத்தங்களுக்காக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உயா்நிலைக் குழு, தனது பணியை விரைவில் தொடங்க வேண்டும்.

மாநிலங்களுக்கிடையே போட்டித்தன்மை வாய்ந்த கூட்டுறவு கூட்டாட்சியை ஊக்குவிக்கவும், எந்த மாநிலம் முதலீட்டாளா்களுக்கு ஏற்றது என்பதை மதிப்பிடவும், ‘மாநிலங்களுக்கான முதலீட்டு குறியீடு’ தொடங்கப்படும்.

இது மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கும். மேலும், முதலீட்டை ஈா்க்கும் வகையில் சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த அவா்களை ஊக்குவிக்கும். அனைவரும், அனைத்து மக்களும், அனைத்து பிராந்தியங்களும், அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே ‘வளா்ந்த இந்தியா’ லட்சியத்தை நோக்கிய நமது பயணம் சாத்தியமாகும் என்றாா்.

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க