செய்திகள் :

`நிதி நெருக்கடி' - மதுபான விலையை 85% வரை உயர்த்திய மகாராஷ்டிரா அரசு; அதிர்ச்சியில் மது பிரியர்கள்

post image

மகாராஷ்டிராவில் மதுபான விலையை மாநில அரசு அதிரடியாக அதிகரித்துள்ளது. இது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் படி மதுபானங்கள் மீதான கலால் வரியை மாநில அமைச்சரவை 78 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது. இதன் படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களில் விலை 90 முதல் 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அதாவது ஒரு குவாட்டர் விலை 205 முதல் 215 வரை இனி விற்கப்படும்.

பிரிமியம் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை 9-12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாட்டுச்சாராயத்திற்கான கலால் வரியும் 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குவாட்டர் விலை ரூ.10-15 வரை அதிகரிக்கும். மேலும் பெர்மிட் ரூம் மற்றும் மதுபானக்கடைகளின் வருடாந்திர லைசென்ஸ் கட்டணம் 10-15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மதுபானத்திற்கும் மாநில அரசு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதன் ஆரம்ப கட்ட குவாட்டர் விலை ரூ.150-ல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திடீர் மதுபான விலை அதிகரிப்பு குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாராஷ்டிரா அரசு ஏற்கெனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கும் லட்கி பெஹின் யோஜனா திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மாநில அரசு கடுமையான சவாலை சந்தித்து வருகிறது. எனவே மதுபானங்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் 14000 கோடி நிதி திரட்ட அரசு திட்டமிட்டு இருக்கிறது.

அதேசமயம் ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு பீர் பார் உரிமையாளர்கள் மற்றும் மதுபானக்கடை உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இக்கட்டண உயர்வால் தங்களது வியாபாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டது.

``எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிப்பதால் ஸ்டாலின் இப்படி பேசுகிறார்'' - செல்லூர் ராஜூ

மதுரை மேற்குத் தொகுதியில் நலத்திட்ட விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களிடம் பேசும்போது, "அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தால் அனைவரும் வேதனையில் உள்ளோம். இறந்தவர்களின... மேலும் பார்க்க

அமெரிக்க இராணுவ விழா: ``பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு அழைப்பு..'' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

அமெரிக்க இராணுவத்தின் 250-வது ஆண்டு விழா ஜூன் 14 சனிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிறந்தநாளுடன் இணைந்து நடைபெறும் எனக் கூறப்படுகிறது. வாஷிங்டனில் ஒரு பெரிய அளவிலான விழா, அணிவகுப்புடன் நட... மேலும் பார்க்க

மா.செ.கூட்டத்தில் அன்புமணி; `மூச்சு இருக்கும் வரை நான் தான் பாமக தலைவர்' - யூ-டர்ன் போடும் ராமதாஸ்!

நேற்று செய்தியாளரை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், '2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்' என்று கூறியிருந்தார். ஆனால், இன்று நடந்த செய்தியாளர் சந்... மேலும் பார்க்க

`கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்' - ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின் முக்கிய 10 பாயிண்ட்ஸ்!

கடந்த சில மாதங்களாகவே, பாமகவில் உள்கட்சி பூசல் அவ்வப்போது வெடித்துகொண்டு வருகிறது. இளைஞரணி தலைவர் பதவியில் தொடங்கிய மோதல் இப்போது தலைவர் பதவிக்கு வந்து நிற்கிறது. கடந்த டிசம்பர் மாதம், பா.ம.கவின் சிறப... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ``இறந்த ஏழைகளின் எண்ணிக்கையை பாஜக அரசு மறைக்கிறது'' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் மகா கும்பமேளா நடைபெற்றது. ஜனவரி 29-ம் தேதி மெளனி அமாவாசை தினத்தில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் அங்கு குவிந்தனா். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சி... மேலும் பார்க்க

``தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும்; அது இபிஎஸ் தலைமையில் அமையும்'' - நயினார் நாகேந்திரன்

நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தி, நாட்டிற்குப் பாதுகாப்பிற... மேலும் பார்க்க