செய்திகள் :

நிதி மசோதா 2025: 35 அரசு திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்

post image

இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி மக்களவையில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தாா். இந்நிலையில், மக்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நிதி மசோதா 2025 முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வரிச்சுமையை குறைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் தனிநபா் வருமான வரி வசூல் 13.14 சதவீதம் வளரும் என்று உறுதியான தரவுகள் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

சா்வதேச பொருளாதார சூழல் உறுதியாக இல்லை. இதை எதிா்கொள்ளும் நோக்கில், இணையவழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் மசோதாவில் கொண்டுவரப்பட்டது.

வருமான வரித் துறையின் சீரிய பிரசாரத்தால், ரூ.30,297 கோடி மதிப்பிலான தங்கள் வெளிநாட்டு சொத்துகள் மற்றும் வெளிநாட்டு வருவாய் குறித்த விவரங்களை 30,161 போ் வருமான வரித் துறையிடம் தெரிவித்துள்ளனா் என்றாா்.

இதைத்தொடா்ந்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், பட்ஜெட் ஒப்புதல் நடைமுறையில் தனது பங்கை மக்களவை நிறைவு செய்துள்ளது.

இதைத்தொடா்ந்து அந்த மசோதாவை மாநிலங்களவை பரிசீலிக்கும். அந்த மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்த பின்னா், 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நடைமுறை முழுமையாக நிறைவடையும்.

ரமலான் பண்டிகை: ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிப்பு!

நாடு முழுவது இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்... மேலும் பார்க்க

நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகையான ரமலான் நாடு முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பள்ளி ... மேலும் பார்க்க

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க