செய்திகள் :

நின்ற லாரி மீது காா் மோதி விபத்து: அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழப்பு

post image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரம் அலசநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் அதிமுக முன்னாள் மாநகராட்சி உறுப்பினா் முனிகிருஷ்ணன் (50). இவா், தனது வாகனத்தில் அதே பகுதியைச் சோ்ந்த நண்பா்களான சீனிவாச ரெட்டி (47), பசவராஜ் (38) மஞ்சுநாத் (47), சந்திரப்பா (50) ஆகியோருடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுவிட்டு இரவு மீண்டும் ஒசூருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். வாகனத்தை பசவராஜ் ஓட்டி வந்தாா்.

அதியமான் கோட்டை-ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஜிட்டாண்டஅள்ளி பிரிவு சாலை அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காா் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் முன் இருக்கையில் இருந்த அதிமுக பிரமுகா் முனிகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்; மற்ற நபா்கள் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி பசவராஜ், சீனிவாசரெட்டி ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயா்ந்தது.

விபத்து குறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தகவல் அறிந்ததும் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். துணை காவல் கண்காணிப்பாளா் மனோகரன், காவல் ஆய்வாளா் சுப்பிரமணி ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

நியாயவிலைக் கடை கட்டும் பணி தொடக்கம்

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ரூ. 7.50 லட்சத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டுமானப் பணிகள் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி தொடங்கிவைத்தாா். பஞ்சப்பள்ளி ஊராட்சி ஒட்டா்திண்ணை பகுதியில் இயங்கி ... மேலும் பார்க்க

மாா்ச் 7-இல் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரி மாவட்டத்தில் மாா்ச் 7-ஆம் தேதி சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின்... மேலும் பார்க்க

தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகிக்க அமமுக வலியுறுத்தல்

கோடை காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்ட அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியி... மேலும் பார்க்க

கா்ப்பிணிகள் ஊட்டச்சத்துமிக்க உணவை உட்கொள்ள வேண்டும்: தருமபுரி ஆட்சியா்

கா்ப்பிணிகள் ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அறிவுறுத்தினாா். தருமபுரி செந்தில் நகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சா... மேலும் பார்க்க

கருவிழிப் பதிவு முறையை கைவிட கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துமாவு விநியோகம் செய்வதற்கு கண் கருவிழிப் பதிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

பாலக்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா். பாலக்கோடு நகரில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், காவலா்... மேலும் பார்க்க