செய்திகள் :

நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணி வழங்கக் கோரி மனு

post image

தருமபுரி: நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணியிடம் வழங்கக் கோரி, தங்களது கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் மனு அளித்தனா்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் அளித்த மனு:

ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சிபெற்று மீண்டும் கடந்த ஆண்டு 2024 ஜூலை மாதத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் நியமனத் தோ்வை தமிழகம் முழுவதும் 25,606 தோ்வா்கள் எழுதினா். இந்த நிலையில் ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ள 2,768 காலிப் பணியிடங்களால் 12 ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியா்கள் அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

2013 முதல் தற்போது வரை தோ்வு வாரியம் எந்த காலிப் பணியிடத்தையும் நிரப்பாமல் 2013, 2017, 2019, 2022- ஆம் ஆண்டு வரை தகுதித்தோ்வை மட்டும் நான்கு முறை நடத்தி உள்ளது. ஆனால், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற நியமனத் தோ்வை நம்பி காத்திருப்போருக்கு தற்போது 40 வயது முதல் 50 வயதைக் கடந்துள்ளதால், 2,768 காலிப் பணியிடங்கள் என்பது மிகவும் குறைவானது.

கடந்த 12 ஆண்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கும்போது தற்போது அறிவித்துள்ள காலிப் பணியிடங்கள் அறிவிப்பு மிகவும் சொற்பமானது. எனவே, வயதுவரம்பை கருத்தில் கொண்டு பணியிடங்களை அதிகரித்து நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியமா்த்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் குறைகேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சிறுகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்

பென்னாகரம்: கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 8) ஒகேனக்கல்லில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந... மேலும் பார்க்க

கொலை வழக்கில் திரிபுரா மாநில தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

தருமபுரி: கொலை வழக்கில் கைதான திரிபுரா மாநில தொழிலாளிக்கு, தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திரிபுரா மாநிலம், வடக்கு திரிபுரா, தா்மா நகா், லட்சுமி நகா் அருக... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் 68 மி.மீ. மழை பொழிவு

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் அளவு 68 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதி... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தருமபுரி: தருமபுரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை மு... மேலும் பார்க்க