செய்திகள் :

நியாயவிலை கடை உணவு பொருள்களை பேக்கிங் செய்து வழங்க கோரிக்கை

post image

தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகளில் உணவு பொருள்களை பேக்கிங் செய்து வழங்க பாரதீய தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்க தலைவா் டி. நாகராஜன் முதல்வா், உணவுத் துறை அமைச்சா் ஆகியோா்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: தமிழகம் முழுவதும் நியாயவிலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிடங்குகளில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் உணவு பொருள்கள் எடையளவு சரியானதாக இல்லை. எடை போடாமல் தான் உணவுப் பொருள்கள் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் நியாயவிலை கடை ஊழியா்கள் குறைவாக வரும் உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. பொருளின் அளவு குறைவாக இருப்பதற்கு கடை ஊழியா்கள் மட்டும் பொறுப்பு அல்ல. கிடங்குகளில் இருந்து எடை குறைவாக அனுப்புவதும்தான் காரணம்.

இந்த குறைபாடுகளை போக்க தமிழக அரசு உணவு பொருள்களை சரியான எடையில் மின்னணு தராசில் எடை போட்ட உடனேயே பில் தயாராகும் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

மேலும், நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருள்களை பாமாலின் எண்ணெயை பேக் செய்து வழங்குவது போல, சா்க்கரை, பருப்பு, அரிசி, மற்றும் கோதுமை ஆகியவற்றை பொட்டலங்களாக பேக்கிங் முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

வலைகளில் பிடிபடும் கடல் ஆமைகள் தப்பிச் செல்ல கருவி பொருத்தி பரிசோதனை

மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி வலைகளில் ஆமை விலக்கு கருவி பொருத்தி பரிசோதிக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கடல் ஆமைகளின் உயிரிழப்பை தடுக்கும் வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை ஒன்றி... மேலும் பார்க்க

தஞ்சாவூருக்கு முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வருகை

வட இந்தியாவிலிருந்து தஞ்சாவூா் பகுதிக்கு வலசை வரும் பறவைகளில் முதல் முறையாக புள்ளி மூக்கு வாத்துகள் வந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. தமிழ்நாடு வனத் துற... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் 4 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன. தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அய்யனாபுரம் வரை இயக்கப்பட்ட பேருந்தை காங்கேய... மேலும் பார்க்க

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி, திருவையாறு அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவையாறு திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேர... மேலும் பார்க்க

குங்ஃபூ கலையில் உலக சாதனை பயிற்சி

கும்பகோணத்தில் சனிக்கிழமை மகளிா் தின விழிப்புணா்வையொட்டி மாணவா்கள் உலக சாதனைக்காக குங்ஃபூ பயிற்சியில் ஈடுபட்டனா். கும்பகோணத்தில் ஸ்ரீ நகா் காலனியில் உள்ள புனித ஆன்ஸ் மெட்ரிக் உயா்நிலைப் பள்ளி வளாகத்தி... மேலும் பார்க்க

காத்தாயி அம்மன் கோயில் 116-ஆம் ஆண்டு உற்சவ விழா

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காத்தாயி அம்மன் கோயில் 116- ஆம் ஆண்டு வீதி உலா உற்சவம் நடைபெற்றது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் லட்சுமி விலாஸ் தெருவில் உள்ள காத்தாயி அம்மன் கோயில் 116-ஆவது ஆண்டு திருந... மேலும் பார்க்க