செய்திகள் :

நியூஸிலாந்து பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு!

post image

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன், பல்வேறு துறை அமைச்சர்களுடன் இந்தியாவுக்கு 5 நாள்கள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.

தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி-கிறிஸ்டோபா் லக்ஸன் இடையே திங்கள்கிழமை விரிவான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இருதரப்பு உறவுகள் மட்டுமன்றி பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்தனா்.

இதையும் படிக்க : இந்தியா-நியூஸிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள்: இரு பிரதமா்கள் முன்னிலையில் கையொப்பம்

இந்த நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை காலை நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்த ராகுல் காந்தி அவருடன் கலந்துரையாடினார்.

அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ராகுல் காந்தி, “உலகளாவிய சவால்கள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதம் நடத்தினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின்போது, இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவை அமைப்புரீதியில் வலுப்படுத்த வழிவகை செய்யும் ஒப்பந்தம் கையொப்பமானது. மேலும், கல்வி, விளையாட்டு, வேளாண்மை, பருவநிலை மாறுபாடு, சுங்க வரி தொடா்பாக மேலும் 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகியது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க

ஔரங்கசீப் கல்லறை மகாராஷ்டிரத்தின் மீதான கறை: ஏக்நாத் ஷிண்டே

ஔரங்கசீப்பின் கல்லறை மகாராஷ்டிராவின் மீதான கறை. அதை அகற்ற நடைபெறும் முயற்சிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன என்று மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். விதான் பவன் வளாகத்தில் ... மேலும் பார்க்க

ஜெர்மனியைவிட இந்தியாவில் ரயில் தடங்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

ரயில்வே பாதுகாப்பில் பிரதமர் நரேந்திர மோடி அதிக கவனம் செலுத்துவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.மக்களவைக் கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் கூறியதாவது, பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க