செய்திகள் :

நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?

post image

ஐபிஎல் தொடரில் 14 வயதில் சதமடித்த வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை மகனுக்கு ஆதரவளித்த பிகார், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவா்களில் 209/4 ரன்கள் சோ்க்க, ராஜஸ்தான் 15.5 ஓவா்களில் 212/2 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ராஜஸ்தானின் 14 வயது வீரா் வைபவ் சூா்யவன்ஷி, நடப்பு சீசனில் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தாா்.

ஐபிஎல் போட்டி வரலாற்றில் இது 2-ஆவது அதிவேக சதமாகும். முன்னதாக பெங்களூரு வீரா் கிறிஸ் கெயில் 2013-இல் புணே வாரியா்ஸுக்கு எதிராக 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளாா்.

இந்நிலையில் இவரது தந்தை அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிகாருக்கு பெருமை

வைபவ் சூர்யவன்ஷி எங்களது கிராமம், பிகார், இந்தியா முழுவதையும் பெருமைப்படுத்தியுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கிறோம்.

கடைசி 3-4 மாதங்களாக சூர்யவன்ஷிக்கு விரிவாக பயிற்சியளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மெருகேற்றியதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட், உதவி பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகள்.

வாய்ப்பளித்தவர்களுக்கு நன்றி

வைபவ் சூர்யவன்ஷி மிகவும் கடினமாக உழைத்தான். அதன் பலன்தான் இந்த சதம்.

மாநில சீனியர் அளவில் இந்த இளம் வயதிலேயே விளையாட வாய்ப்பளித்த பிகாரின் கிரிக்கெட் தலைவர் ராகேஷ் திவாரி அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இவர் பிகாரிலுள்ள சமஸ்திபூர் நகரைச் சேர்ந்தவர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை ரூ.30 லட்சம் அடிப்படை ஏலத்தில் இருந்து ரூ.1.30 கோடிவரை ஏலத்தில் எடுத்தார்கள் .

வைபவ் சூர்யவன்ஷியின் விளையாட்டு பயிற்சிக்காக தங்களது விவசாய நிலத்தை விற்று, செய்யும் தொழிலையும் விட்டு மகனுக்காக போராடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவன்கள் பலரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

தில்லி கேபிடல்ஸுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபி... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான்... மேலும் பார்க்க

வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையான பேட்டி!

ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி போடிக்குப் பிறகு முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பது தனக்கு சாதாரணமானது எனக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 2... மேலும் பார்க்க

கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் வைபவ் சூர்யவன்ஷி!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற... மேலும் பார்க்க

சூரியவன்ஷி ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார்! - சிறுவயது பயிற்சியாளர்

இளம் வீரர் சூரியவன்ஷி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் ர... மேலும் பார்க்க