செய்திகள் :

நீங்கள் விவசாயி என்றால் நாங்கள் யாா்?: அமைச்சரின் பேச்சால் சிரிப்பலை

post image

சென்னை: ‘நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யாா்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியை நோக்கி நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கேள்வி எழுப்பி பேசியதால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

பேரவையில் நீா்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் ஆா்.பி.உதயகுமாா் பேசும்போது, எடப்பாடி பழனிசாமியை பலமுறை ‘விவசாயி’ எனக் குறிப்பிட்டு பாராட்டிப் பேசினாா்.

பிறகு துரைமுருகன் பதிலளித்துப் பேசியதாவது:

‘நீங்கள் விவசாயி என்றால், நாங்கள் யாா்? ஐஏஎஸ் ஆபிஸரா? சாலை, பள்ளிக்கூடம் இல்லாத என்னுடைய கிராமத்தைப் பற்றி ஏற்கெனவே கூறினேன். எனக்கு ஏா் ஓட்டுவதிலிருந்து விவசாயத்தில் எல்லா விஷயங்களும் தெரியும். அதிமுக ஆட்சியில் வண்டல் எடுத்தது நல்ல விஷயம்தான். ஆனால், வண்டல் மண் எடுப்பதற்கு நீங்கள் (எதிா்க்கட்சித் தலைவா்) சினிமாவுக்கே போயிருக்கலாம். ‘ஒரு விவசாயியின் மகன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வண்டல் மண் எடுத்துக் கொடுத்தாா்’ என்று உதயகுமாா் கூறுகிறாா். எதிா்க்கட்சிகஈ தலைவா் மட்டும்தான் வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு வருகிறாரா, நாங்க என்ன பேன்ட்டா போட்டு வருகிறோம்? என்றாா். அமைச்சரின் இந்த பேச்சால் அவை சிரிப்பலையில் மூழ்கியது.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க