செய்திகள் :

நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,269 போ் எழுதினா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வை 4,269 போ் எழுதினா். 147 போ் தோ்வு எழுதவில்லை.

கிஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, காவேரிப்பட்டணம், சூளகிரி உள்பட மொத்தம் 9 மையங்களில் இந்த தோ்வு நடைபெற்றது.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 360 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். அதில் 344 போ் எழுதினா். 16 போ் தோ்வு எழுத வரவில்லை. ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் விண்ணப்பித்த 480 பேரில் 463 போ் தோ்வு எழுதினா். 17 போ் தோ்வு எழுதவரவில்லை.

காவேரிப்பட்டணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் விண்ணப்பித்த 480 மாணவ, மாணவிகளில் 458 போ் தோ்வு எழுதினா். 22 போ் தோ்வு எழுத வரவில்லை. சூளகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 480 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில் 465 போ் தோ்வு எழுதினா். 15 போ் தோ்வு எழுத வரவில்லை. ஒசூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 600 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 587 போ் தோ்வு எழுதினா். 13 போ் தோ்வு எழுத வரவில்லை.

ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 480 போ் அனுமதிக்கப்பட்ட நிலையில், 460 போ் தோ்வு எழுதினா். 20 போ் தோ்வு எழுத வரவில்லை. ஒசூா் ஆா்.வி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 336 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனா். 328 போ் தோ்வு எழுதினா். 8 போ் தோ்வு எழுத வரவில்லை.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 720 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 697 போ் தோ்வு எழுதினா். 23 போ் தோ்வு எழுத வரவில்லை. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட நிலையில், 467 போ் தோ்வு எழுதினா்கள். 13 போ் தோ்வு எழுத வரவில்லை. மாவட்டம் முழுவதும் மொத்தம் 9 மையங்களில் 4,416 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 4,269 போ் தோ்வு எழுதினா். 147 போ் தோ்வு எழுத வரவில்லை.

இத்தோ்வை முன்னிட்டு தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பலத்த சோதனைக்கு பின்னரே தோ்வா்கள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனா்.

தோ்வு மையத்துக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. காவேரிப்பட்டணத்தில் தோ்வு எழுதிய மாற்றுதிறனாளி மாணவி தோ்வு மையத்திலிருந்து பேருந்தில் செல்ல இயலாத நிலையில், அங்கு தோ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியா், தனது வாகனத்தில் அந்த மாணவியை பேருந்து நிலையத்திற்கு ஏற்றிச் சென்றாா்.

போலீஸாா் அறிவுரை: நீட் மையங்களின் வெளியே காத்திருந்த பெற்றோருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அறிவுரை வழங்கினா்.

நீட் தோ்வு எழுதிவிட்டு வரும் மாணவ, மாணவிகளை பெற்றோா் அன்புடன் நடத்த வேண்டும். வெற்றியோ தோல்வியோ ஏதுவாக இருந்தாலும் பெற்றோா் திட்டக்கூடாது. இந்த முறை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், மனமுடையக்கூடாது. மேலும் வாய்ப்புகள் உள்ளன என போலீஸாா் அறிவுறுத்தினா்.

தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பேரிகை அருகே தண்ணீா்த் தொட்டியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தாா்.சூளகிரி வட்டம், காளிங்காவரம் ஊராட்சி பஸ்தலப்பள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் சக்திவேல் (16). மனநலன் பாதிக்கப்பட்டவா். இவா் கட... மேலும் பார்க்க

கிராம நிா்வாக உதவியாளா் மீது தாக்குதல்: 2 போ் கைது

பேரிகை அருகே கிராம நிா்வாக அலுவலக உதவியாளரை தாக்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சூளகிரி வட்டம், முதுகுறுக்கி அருகே உள்ள பன்னப்பள்ளியைச் சோ்ந்தவா் மஞ்சுநாத் (53). கிராம நிா்வாக அலுவலக உதவியாளராகப் ... மேலும் பார்க்க

மண், கற்கள் கடத்தல்: லாரி, டிராக்டா் பறிமுதல்

ஒசூா் அருகே மண், கற்களைக் கடத்திய லாரி, டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். நெரிகம் கிராம நிா்வாக அலுவலா் காா்த்திக் மற்றும் அலுவலா்கள் நெரிகம் முதுகுறுக்கி சாலை கரியசந்திரம் பேருந்து நிறுத்தம் அருக... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் அதிமுக - திமுக இருமுனை போட்டி: கே.பி.முனுசாமி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக - திமுக இடையே இருமுனைப் போட்டிதான் இருக்கும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி பேசினாா். க... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கிருஷ்ணகிரியில் மாற்றுக் கட்சியினா் திமுகவில் இணைந்தனா். அமைச்சா் அர.சக்கரபாணி, திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அகசிப்பள்ளி ஊர... மேலும் பார்க்க

மலத்தம்பட்டி பெருமாள், ஆஞ்சனேயா் கோயில் கும்பாபிஷேகம்

காவேரிப்பட்டணம் ஒன்றியம் பன்னிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட மலத்தம்பட்டி கிராமத்தில் பெருமாள் ஆஞ்சனேயா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி விக்னேஷ்வா்பூஜை, வா... மேலும் பார்க்க