செய்திகள் :

நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்!

post image

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" எனக் கூச்சலிட்டிருக்கிறார்.

நீதிபதி கவாய்

இருந்தும் அவரைக் காவலர்கள் வெளியேற்றிய பின்னர் “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது. அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான்" எனக் கூறிவிட்டு, எந்த பரபரப்பும் இல்லாமல் வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய்.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்று உச்சநீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி மீதான வெட்கக்கேடான நடவடிக்கை, நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்டனத்துக்குரியது.

மாண்புமிகு தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதிமன்றத்தின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால் அதற்காக நாம் இந்த சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஸ்டாலின்
Mk Stalin - ஸ்டாலின்

தாக்குதல் நடத்தியவர் கூறிய காரணம் இன்றும் அடக்குமுறை மற்றும் உயர்வு-தாழ்வு கற்பிக்கும் மனநிலை நம் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நீதித்துறைப்போன்ற நமது நிறுவனங்களை மதித்து பாதுகாக்கும் மற்றும் நடத்தையில் முதிர்ச்சியை வெளிப்படுத்தும் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பல்வேறு எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் நீதிபதி கவாய் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது செய்தி... மேலும் பார்க்க

Kantara: "தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் சேர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி" - அண்ணாமலை ரிவ்யூ

இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்... மேலும் பார்க்க

'கரூர் வழக்கில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதா? தவெகவை திமுக நசுக்க பார்க்கிறது' - அண்ணாமலை

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் விவகாரத்தில்சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து... மேலும் பார்க்க

``இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெர... மேலும் பார்க்க

``சினிமா கவர்ச்சி போல வாக்குறுதி; ஏமாற்றுவது, திமுகவுக்கு கைவந்த கலை'' - செல்லூர் ராஜூ காட்டம்

"என் தந்தை அறிவுஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ... மேலும் பார்க்க

500 ஆண்டுகளாக நடக்கும் துர்கா பூஜை: கலவரக் காடாக மாறிய ஒடிசா நகரம்; இணைய முடக்கம் - என்ன நடந்தது?

துர்கா பூஜை ஊர்வலம்24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதனையடுத்து மோகன் சரண் மாஜி தலைமையில், ஒடிச... மேலும் பார்க்க