செய்திகள் :

நீலகிரி: மக்கள் கூடும் இடங்களில் பெண்களை பாதுகாக்க பிங் பேட்ரோல் அறிமுகம்! - விவரம் என்ன?

post image

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் முயற்சியாக பல்வேறு திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிங்க் ரோந்து வாகனத்தை நீலகிரியில் முதல் முறையாக அறிமுகம் செய்திருக்கிறது காவல்துறை.

பிங்க் பேட்ரோல்

மக்கள் கூடும் இடங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் அத்துமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்பட இருக்கிறது காவல்துறையின் சிறப்புக்குழு.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி செந்தில்குமார் , "பிங்க் பேட்ரோல் என்ற பெயரில் பெண் காவலர்கள் குழு அடங்கிய சிறப்பு இருசக்கர ரோந்து வாகன திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 8 மணிமுதல் 11 முற்பகல் மணி வரையிலும் மற்றும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்கள் அதிகம் கூடும் இடங்களான நகராட்சி மார்கெட் உழவர் சந்தை,

பிங்க் பேட்ரோல்

பேருந்து நிலையம் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களில் இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். பிங்க் நிற ஸ்கூட்டரில் பிங்க் நிற கோட் அணிந்து ரோந்து வரும் இவர்கள் ஒலி பரப்பி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடங்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் அந்த பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு அந்த பகுதிகளில் மாணவிகளுக்கு ஏற்படும் ஈவ்டீசிங் போன்ற தொந்தரவுகளில் இருந்து காக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.

பிங்க் பேட்ரோல்

மாணவிகள் தைரியத்துடன் செயல்பட இந்த பிங்க் பேட்ரோல் ரோந்து வாகனம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஊட்டி நகரம் 3, ஊட்டி ஊரகம் 2, குன்னூர் 2, கோத்தகிரி 1, கூடலூர்- 2 என தற்போது மொத்தம் 10 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

தென்காசி: சோலார் மின் ஆலை அமைக்க எதிர்ப்பு; ஆட்சியர் அலுவலகம் முன் 8 நபர்கள் தீக்குளிக்க முயற்சி!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்துள்ள கல்லத்திகுளம் பகுதியில் தனியார் நிறுவனம் சோலார் மின் ஆலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சோலார் மின் ஆலை அமைப்பதனால் வெ... மேலும் பார்க்க

கொல்கத்தா: பாஜக எம்.பி மீது கல்வீச்சு; ரத்தம் வழிய மருத்துவமனையில் அனுமதி; பின்னணி என்ன?

மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காகன் முர்மு மீது உள்ளூர்வாசிகள் நடத்திய கல்வீச்சுத் தாக்குதலில், அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொ... மேலும் பார்க்க

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து கிளம்பும்? - அமைச்சர் சிவசங்கர் தகவல்!

இந்த மாதம் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை. திங்கள் கிழமை தீபாவளி என்பதால் அதற்கு முந்தைய சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை என தொடர் விடுமுறையாக அமைந்திருக்கிறது. வழக்கம்போல சென்னையிலிருந்து பல லட்சம் ம... மேலும் பார்க்க

'ஹெச்-1பி விசா அதிக கட்டணம் விரைவில் ரத்தா?' - அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர் சொல்லும் காரணம்

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹெச்-1பி விசா குறித்து அதிரடி அறிவிப்பை ஒன்றை அறிவித்துள்ளார். அதன் படி, கடந்த 22-ம் தேதி முதல், இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 1 லட்சம் டாலர்கள... மேலும் பார்க்க

"சேலம் 'Fake Wedding' நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்" -வேல்முருகன் காட்டம்

அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் நடைபெறுவது போல், சேலம் மாநகரில் 'பேக் வெட்டிங்' இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. திருமண விழா ... மேலும் பார்க்க

"நரித்தனம்; கரூர் சம்பவத்தை வைத்து விஜய்யுடன் பழனிசாமி கூட்டணி பேச்சுவார்த்தை" - டிடிவி காட்டம்!

கரூரில் தவெக விஜய்யின் பிரசாரத்தின்போது நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41பேர் உயிரிழந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்க ... மேலும் பார்க்க