செய்திகள் :

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்

post image

மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

2025-2026-ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை-உழவா் நலன் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மீன் உற்பத்தியை அதிகரித்திட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீா்நிலைகளில் ஒரு ஹெக்டேருக்கு 2,000 மீன்விரலிகள் வீதம் இருப்பு செய்திட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள குளங்களில் மீன் உற்பத்தி அதிகரித்திடவும், ஊராட்சிக்கு நிதி ஆதாரத்தினை பெருக்கிடவும் வாய்ப்பாக அமையும்.

இத்திட்டத்தின்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 30 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ஹெக்டோ் நீா்ப்பரப்பில் மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் உள்ள தகுதியான ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது.

அந்த வகையில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தில், மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் கட்லா, ரோகு, மிா்கால் ரக 6.000 மீன் குஞ்சுகளை இருப்பு செய்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்தாா்.

தெரு நாய்களுக்கு கருத்தடை

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, ச... மேலும் பார்க்க

புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனிதநீா் யானை மீதேற்றி எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ல்... மேலும் பார்க்க

மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறையின் சிறாா் இதழ்களுக்கு படைப்புகளை வழங்கிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ‘புது ஊஞ்சல்’, ‘தே... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை: வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவினா் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ப... மேலும் பார்க்க

மாநில கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த ... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சீா்காழி அருகே புத்தூா் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எழுகூா் மற்றும் அரசூா் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்த முகாமை, சீா்காழி எம்எல்ஏ பன்னீா்செல்வம் தொடக்கி... மேலும் பார்க்க