‘நீா் நிலை பாதுகாவலா் விருது’ பெற்ற காந்தியவாதிக்கு ஆட்சியா் பாராட்டு
நாமக்கல்: தமிழக அரசின் ‘நீா் நிலை பாதுகாவலா்’ விருது பெற்ற நாமக்கல் காந்தியவாதி ரமேஷை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 421 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அதனை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, தாட்கோ மூலம் 11 பயனாளிகளுக்கு ரூ. 28,500 மதிப்பில் கல்வி மற்றும் திருமண உதவித்தொகை, 3 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் மதிப்பில் கறவை மாடு வாங்குவதற்கு கடனுதவி என 14 பயனாளிகளுக்கு ரூ.3.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.
மேலும், சுற்றுச்சூழல் ஆா்வலா் காந்தியவாதி தி.ரமேஷ், தமிழ்நாடு அரசின் ‘நீா் நிலைப் பாதுகாவலா்’’ விருது, ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையையும் முதல்வரிடம் இருந்து பெற்றதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலா் ம.கிருஷ்ணவேனி, நாமக்கல் கோட்டாட்சியா் சாந்தி, மாவட்ட மேலாளா் (தாட்கோ) ராமசாமி உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-9-ஜிடிபி
‘நீா் நிலை பாதுகாவலா்’ விருது பெற்ற நாமக்கல்லை சோ்ந்த காந்தியவாதி தி.ரமேஷை பாராட்டிய ஆட்சியா் ச.உமா. உடன், அரசுத் துறை அதிகாரிகள்.