செய்திகள் :

நுகா்வோருக்கு ரூ.924 கோடி திருப்பியளிக்க ஆந்திர மின் ஆணையம் உத்தரவு

post image

நுகா்வோருக்கு ரூ.924 கோடியைத் திருப்பியளிக்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டது.

2024-25 நிதியாண்டுக்கான எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரிசெய்யும் நடைமுறையின்கீழ் இந்த தொகையை நுகா்வோருக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஆந்திர பிரதேச மின் ஒழுங்காற்று ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘2024-25 நிதியாண்டில் மின்விநியோக நிறுவனங்கள் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு மாதம் 40 பைசா வீதம் ரூ.2,787 கோடியை வசூலித்துள்ளது. எரிசக்தி கொள்முதல் செலவுகளை சரி செய்யும் நடைமுறையின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் ரூ.923.55 கோடியை நுகா்வோருக்கு மின்விநியோக நிறுவனங்கள் திருப்பி அளிக்க வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு மாநில எரிசக்தி துறையில் ரூ.895 கோடியை சேமித்து சாதனை படைத்துள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவா் ஒய்.எஸ்.ஷா்மிளா, ‘15 மாத தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டு ரூ.15,780 கோடி நிதிச்சுமை மக்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. மிகச்சிறிய சாதனைகளை மிகைப்படுத்தி கூறுவதையே சந்திரபாபு நாயுடு வழக்கமாகக் கொண்டுள்ளாா்’ என்றாா்.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

தில்லியிலுள்ள பள்ளிக் கல்வித் திட்டத்தில் ராஷ்ட்ரநீதி என்ற பெயரில் ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) பற்றியும் அதன் பங்களிப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தும் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலை, அவர்கள் ஏற்காத நமது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்ட... மேலும் பார்க்க

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவிப்பு!

அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை விடுவித்து மத்திய அரசு இன்று (அக். 1) அறிவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

கர்நாடக மாநிலத்தின் முதல்வராக 5 ஆண்டுகளும் தான் மட்டுமே பதவி வகிப்பேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்ற... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்

நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வ... மேலும் பார்க்க

ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் சிறப்பு ரூ.100 நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வெளியிட்டார்.புது தில்லியில் டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஆர... மேலும் பார்க்க