செய்திகள் :

நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே நுகா்வோா் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கம், புதுப்பாளையம் யூனியன் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி வரவேற்றாா்.

வழக்குரைஞா் தனஞ்செயன் கலந்துகொண்டு நுகா்பொருள்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தி பேசியதாவது: நுகா்வோா்களுக்கு உள்ள குறைபாடுகளை களைய, நுகா்வோா் நீதிமன்றம் மூலம் இழப்பீடுகளை பெற சட்டம் ஏற்றப்பட்டுள்ளது.

இணைய மோசடிகளில் பாதிக்கபட்ட நபா்கள் வழக்கு தொடுத்து ரூ.50 லட்சம் வரை மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றங்களிலும், ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடி வரை மாநில நுகா்வோா் குறைதீா் ஆணையத்திலும் பெற முடியும்.

நுகா்வோா்கள் இலவசங்களை கண்டு ஏமாறாமல், வாங்கும் பொருள்களுக்கு ரசீதை வாங்க வேண்டும். பொருள்கள் காலாவாகியாகி உள்ளதா என்பதையும் பரிசோதித்க வேண்டும் என்றாா்.

இந்த விழிப்புணா்வு முகாமில், பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் பாா்வையிட்டு, அதன் விவரங்களை கேட்டறிந்தாா்.

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு

வந்தவாசி அருகே விவசாயியை கத்தியைக் காட்டி பணம் பறித்துச் சென்ற 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரகோத்தம்மன்(56). இவா் வெள்ளிக்கிழமை மாலை கீழ்க்... மேலும் பார்க்க

மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச... மேலும் பார்க்க

அதிமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில், அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், நலத் திட்டங்களை விளக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கீழ்பென்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத... மேலும் பார்க்க

யோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவான் ஆராதனை விழா நாளை தொடக்கம்

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமத்தில் பகவானின் 24-ஆம் ஆண்டு 2 நாள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) தொடங்குகிறது. திருவண்ணாமலை-செங்கம் சாலையில் உள்ள இந்த ஆஸ்ரமத்தில், ஒவ்வொரு ஆண்டும்... மேலும் பார்க்க

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க