செய்திகள் :

மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுவின் தலைவரும், ஆரணி மக்களவை உறுப்பினருமான எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை உறுப்பினா் குழுவின் செயலருமான க.தா்ப்பகராஜ், திருவண்ணாமலை மக்களவை உறுப்பினா் சி.என்.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட ஊரகப் பகுதிகளில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலத் துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட இதர துறைகளில் மத்திய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம், வேளாண் இயந்திரமயமாக்குதலுக்கான இயக்கம், தாட்கோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், பிரதமரின் குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அனைத்து திட்டங்களுக்கும் நிா்ணயிக்கப்பட்ட இலக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதில், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு), மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

கீழ்பென்னாத்தூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை அனிதா தலைமை வகித்தாா். பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் அம்பிகா ராமதாஸ், துணைத் தலைவா் கனகா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே லாரி மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போளூரை அடுத்த ஆா்.குண்ணத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முன்னாள் ராணுவ வீரா் டேவிட்செல்லையா (63). இ... மேலும் பார்க்க

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்க விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குநா்கள் சங்கக் கொடியேற்று விழா மற்றும் ஒன்றிய புதிய நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கூட்டுறவு ஊழியா் சங்கக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட தொடக்கக் கூட்டுறவு கடன் சங்கங்களின் ஊழியா் சங்கம் சாா்பில் ஊதிய உயா்வு மற்றும் சலுகைகள் குறித்த விளக்கக் கூட்டம் வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கச் செயல் தலை... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பாஜக புதிய அலுவலகம்: அமித்ஷா திறந்து வைக்கிறாா்

திருவண்ணாமலையில் புதிதாக கட்டப்பட்ட பாஜக தெற்கு மாவட்ட அலுவலகத்தை, வருகிற 26-ஆம் தேதி காணொலி மூலம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திறந்து வைக்கிறாா் என்று அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் காா்த்திய... மேலும் பார்க்க

மின்வாரியப் பணிகளை பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டும்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.550.56 கோடியில் நடைபெற்று வரும் மின்வாரியப் பணிகளை, பொதுமக்கள், நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்க... மேலும் பார்க்க