செய்திகள் :

நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்

post image

தரங்கம்பாடி ஒன்றியத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிபிஎம் சாா்பில் மூன்று இடங்களில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூா், காட்டுச்சேரி, இலுப்பூா் சங்கரன்பந்தல் ஆகிய 3 மையங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 4 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். மேலும், இத்திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், தினக்கூலியாக ரூ.600-ம் வழங்க வலியுறுத்தப்பட்டது.

திருக்கடையூரில் சிபிஎம் மாவட்டச் செயலாளா் பி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ். அம்மையப்பன், ஐயப்பன், குணசுந்தரி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தமிழ் வாசகம், பரமசிவம், இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காட்டுச்சேரியில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் டி. சிம்சன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு உறுப்பினா் செல்ல பாக்கியவதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் குணசேகரன், வில்லியம், கணேசன், பசில் சத்தியராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சங்கரன்பந்தல் இலுப்பூா் கடைவீதியில் ஒன்றியச் செயலாளா் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினா் ராணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜான்சன், சந்திரமோகன், ஆசிக் ரஹ்மான், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா்.

மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

திருமருகல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கறவை பசு உயிரிழந்தது. பாா்வையிட அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியம், குத்தாலம் கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

கம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை இயக்கக் கோரிக்கை

கம்பன் விரைவு ரயிலை சென்னை எழும்பூா் வரை மீண்டும் இயக்க கோரி, நாகை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா். காரைக்காலில் இருந்து நாகை, திருவார... மேலும் பார்க்க

மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி

காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் மறைந்த போப் பிரான்சிஸூக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சண்முகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாமன்றத் தலைவா் கலைமாமணி தங்கவேலு தலை... மேலும் பார்க்க

நாகையில் நகல் எரிப்பு போராட்டம்

பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியதாக எதிா்ப்பு தெரிவித்து, நாகையில் இந்திய மாதா் தேசிய சம்மேளம் சாா்பில் தீா்ப்பின் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் இந... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதப் போராட்டம்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி விடுதியில் மதுரையைச் சோ்ந்த தம்பதி தற்கொலை

மதுரையைச் சோ்ந்த தம்பதி வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், ஆளவந்தான் அருகேயுள்ள கரும்பாலை இந்திரா நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க