செய்திகள் :

நெகிழி தடையை செயல்படுத்தியவா்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள்!

post image

ஒற்றைப் பயன்பாடு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி வரும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு ‘மஞ்சப்பை’ விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘மீண்டும் மஞ்சப்பை’ பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறையால் ‘மஞ்சப்பை’ விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகள் மீதான தடையை திறம்படச் செயல்படுத்தி, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிா்ப்பித்து வரும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருது பெறுபவா்களுக்கு முதல் பரிசு ரூ.10 லட்சமும், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சமும், மூன்றாம் பரிசு ரூ. 3 லட்சமும் வழங்கப்படவுள்ளது.

விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள அனைத்து இணைப்புகளிலும் தனிநபா், அமைப்புத் தலைவா் முறையாக கையொப்பமிட்டு, இரு பிரதிகள், இரு குறுவட்டு பிரதிகளை சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் வருகிற 1.5.2025-ஆம் தேதிக்குள் சமா்பிக்கலாம் என்றாா்.

நடனக் கலைஞா் திடீா் உயிரிழப்பு!

புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடனமாடிய நடனக் கலைஞா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா். சிவகங்கை மன்னா் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி முதல் நடைபெற... மேலும் பார்க்க

நூலகத்தில் போட்டித் தோ்வுக்கு வழிகாட்டுதல் பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அண்ணா கிளை நூலகத்தில் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் திருஞானசம்பந்தம... மேலும் பார்க்க

காரைக்குடி மாநகராட்சி வாா்டுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி வாா்டுகளில் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவா்களுக்கு கல்வெட்டு படி எடுக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அரசு அருங்காட்சியகம் சாா்பில் 3 நாள்க... மேலும் பார்க்க

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க