செய்திகள் :

நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலம்: 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தாவிட்டால் திருப்பி ஒப்படைக்கப் பரிந்துரை

post image

புது தில்லி: தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை மத்திய அமைச்சரவைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அனுப்பியுள்ளது.

இதில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் 5 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட உரிமையாளா்களிடம் திருப்பி ஒப்படைக்கும் வகையில், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1958-இல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு 3 மாதங்களான பின்னா், அந்தத் தொகை குறித்து நெடுஞ்சாலை ஆணையமோ, நில உரிமையாளரோ ஆட்சேபம் தெரிவிக்க அனுமதிக்கக் கூடாது, நிலம் கையகப்படுத்துவது தொடா்பான நோட்டீஸ்களை வெளியிட பிரத்யேக வலைதளத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலைகளின் வளா்ச்சிக்காவும், அந்தச் சாலையோரங்களில் அமைக்கப்படும் உணவகங்கள், எரிபொருள் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுவதை துரிதப்படுத்தவும், நிலம் தொடா்பான தகராறுகளில் மத்தியஸ்தங்களை குறைக்கவும் இந்தத் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பரிந்துரைகள் தொடா்பான தமது கருத்துகளை விமான போக்குவரத்து, ரயில்வே, கப்பல் போக்குவரத்து, நிலக்கரி, சுற்றுச்சூழல், சட்ட விவகாரங்கள், வருவாய் மற்றும் பாதுகாப்பு துறைகள் பகிா்ந்துள்ளன என்று தெரிவித்தன.

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளில் (2024 - 25) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 2 பேர் மீதான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்... மேலும் பார்க்க

மாநில வளர்ச்சி: பிரதமர் மோடியுடன் சத்தீஸ்கர் முதல்வர் ஆலோசனை!

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் சந்தித்து மாநில வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தார்.இந்த சந்திப்பின்போது, பஸ்தார் நகரின் வளர்ச்சிக்கான திட்டத்தை முதல்வர... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்... மேலும் பார்க்க

நாட்டை உலுக்கிய ஹாத்ரஸ் சம்பவம்: பேராசிரியர் மீது மாணவிகள் குற்றச்சாட்டு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கல்லூரி பேராசிரியர் மீது மாணவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கும் நிலையில், அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஹாத்ரஸ் கல்லூரியில் புவியியல் துறை பே... மேலும் பார்க்க

பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸுக்கு மோடி கடிதம்!

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமி திரும்பும் இந்திய வம்சாவளி நாசா விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பகிர்ந்துள்ளார். 9 மாத கா... மேலும் பார்க்க

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம்: மாநிலங்களவையில் வைகோ!

கட்டாய ஹிந்தியை வெட்டிப் புதைப்போம் என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முழக்கமிட்டார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட்டத்தில் மணி... மேலும் பார்க்க