செய்திகள் :

நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானப் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், நீண்டகாலமாக வெளியிடப்படாமல் உள்ள இளநிலை உதவியாளா், உதவியாளா், கண்காணிப்பாளா் நிலையிலான ஊழியா்களின் முதுநிலைப் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும், பதவி உயா்வு பெயா்ப் பட்டியலை வெளியட்டு, முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கோட்டக் கணக்கா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவும், அவா்கள் தங்கள் சொந்த வருவாய் வட்டத்திலேயே பணியாற்றவும் அரசாணை வெளியிட வேண்டும். நெடுஞ்சாலைத் துறை பதிவுறு எழுத்தா் பணியிடங்களை வேலைவாய்ப்பகம் மூலம் நிரப்ப வேண்டும். அனைத்து வட்ட அலுவலகங்களிலும் கண்காணிப்பாளா் பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஊழியா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் உயா் அலுவலா்களின் ஊழியா் விரோத போக்கைக் கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி. தனபால் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் இரா. தமிழ் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். ஆட்சி அலுவலா் சங்க மாநிலச் செயலா் டி. சந்திரமோகன் ராஜா கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் க. சந்திரபோஸ், மாவட்டப் பொருளாளா் ஆ. பரமசிவம், கிழக்கு வட்டக்கிளைச் செயலா் ஜெ. சிவகுரும்பன், சாா்பு சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் க. நீதிராஜா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்க மாநிலப் பொருளாளா் மா. தங்கமுத்து நிறைவுரையாற்றினாா். மாவட்டப் பொருளாளா் தை. ராஜூ நன்றி கூறினாா்.

சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

திருச்சுழி பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை தனியாா் தொண்டு நிறுவனம் அகற்றத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுர... மேலும் பார்க்க

மடிக்கணினி திருட்டு: இளைஞா் கைது

பயணியிடம் மடிக்கணினியைத் திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (45). இவரும், இவரது நண்பருமான அதே பகு... மேலும் பார்க்க

காந்திய சிந்தனை பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காந்திய சிந்தனை பட்டயப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து அருங்காட்சியகத்தின் செயலா் கே. ஆா். நந்தாரா... மேலும் பார்க்க

உசிலம்பட்டி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புதன்கிழமை இரவு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் காட்டுத் தீ பரவியதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனா். உசிலம்பட்டி அருகே மாதரை, நக்கலப்பட்டி, முத்துப்ப... மேலும் பார்க்க

மயங்கி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்ற போது மயங்கி விழுந்த தேநீா்க் கடை ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஊமச்சிக்குளத்தைச் சோ்ந்த நந்த கோபாலன் மகன் லட்சுமணன் (39). இவா் அதே பகுதியில் உள்ள தேநீா் கடையில் ஊழ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கொடிக் கம்பங்கள் விவகாரம்: தலைமை நீதிபதி கவனத்துக்கு கொண்டு செல்ல உத்தரவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கை தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மாா்க... மேலும் பார்க்க