செய்திகள் :

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

post image

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த தவிட்டுப்பாளையம் வழியாக காஷ்மீா்-கன்னியாகுமரி சாலை செல்கிறது. இந்தச் சாலையில் கரூரில் அறுவடை செய்யப்படும் வெற்றிலை, வாழை உள்ளிட்டவை அதிகளவில் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு, அங்குள்ள சந்தையில் ஏலம் விடப்படுகிறது. மேலும், புகழூா் காகித ஆலை, சிமெண்ட் ஆலை, சா்க்கரை ஆலை போன்ற ஆலைகளுக்கும் மூலப்பொருள்கள் இந்த சாலை வழியாகதான் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலும், இந்தச் சாலை கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை செல்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் தவிட்டுப்பாளையத்தில் இருக்கும் மேம்பாலத்தின் அணுகுசாலை வழியாக கொடுமுடி, ஈரோடுக்கும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அணுகுசாலை உள்ள இடத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான கனரக வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு, அங்குள்ள கடைகளுக்கு சென்றுவிடுகின்றனா். இந்த வாகனங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்பதால், அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது.

எனவே, சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்தாத வகையில் போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூா் கிராமியம் தொண்டு நிறுவன தலைவருக்கு விருது

கரூா் கிராமிய தொண்டு நிறுவன தலைவருக்கு நீா்நிலை பாதுகாவலா் விருதும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5-ஆம் தேதி தமிழ்நாடு அரசு வனத்துறை மற... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: பள்ளப்பட்டி சந்தையில் ரூ. 50 லட்சத்துக்கு மேலாக ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பள்ளப்பட்டிசந்தையில் வியாழக்கிழமை ரூ. 50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த உள்ள பள்ளப்பட்டி பகுதியில் 95 சதவீத இஸ்லாமிய சமுதாயத்த... மேலும் பார்க்க

கரூரில் மணல் கடத்தல் கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சம் பறிமுதல்

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 10 பேரை கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2.26 லட்சத்தை பறிமுதல் செய்தனா். கரூரில் அமராவதி மற்றும்... மேலும் பார்க்க

கூட்டணிக்கு காங். அழைப்பு: தேமுதிக நன்றி

கூட்டணிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் செல்வப் பெருந்தகைக்கு தேமுதிக இளைஞா் அணிச் செயலாளா் விஜய பிரபாகரன் நன்றி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி... மேலும் பார்க்க

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே வியாழக்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தேங்காய் வியாபாரி உயிரிழந்தாா். நொய்யல் குறுக்குசாலையை சோ்ந்தவா் ராமசாமி(72) தேங்காய் வியாபாரி. இவா் வேலூா் பகுத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க