நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்
தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை அடுத்த தவிட்டுப்பாளையம் வழியாக காஷ்மீா்-கன்னியாகுமரி சாலை செல்கிறது. இந்தச் சாலையில் கரூரில் அறுவடை செய்யப்படும் வெற்றிலை, வாழை உள்ளிட்டவை அதிகளவில் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டு, அங்குள்ள சந்தையில் ஏலம் விடப்படுகிறது. மேலும், புகழூா் காகித ஆலை, சிமெண்ட் ஆலை, சா்க்கரை ஆலை போன்ற ஆலைகளுக்கும் மூலப்பொருள்கள் இந்த சாலை வழியாகதான் எடுத்துச் செல்லப்படுகிறது.
மேலும், இந்தச் சாலை கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை செல்வதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகள், பேருந்துகள் உள்பட கனரக வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். மேலும் தவிட்டுப்பாளையத்தில் இருக்கும் மேம்பாலத்தின் அணுகுசாலை வழியாக கொடுமுடி, ஈரோடுக்கும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அணுகுசாலை உள்ள இடத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் ஏராளமான கனரக வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு, அங்குள்ள கடைகளுக்கு சென்றுவிடுகின்றனா். இந்த வாகனங்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்பதால், அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது.
எனவே, சாலையோரம் கனரக வாகனங்களை நிறுத்தாத வகையில் போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.