செய்திகள் :

நெட்ஃபிளிக்ஸ் தொடருக்காக 44 மில்லியன் டாலர் மோசடி!

post image

நெட்ஃபிளிக்ஸ் தொடர் இயக்குவதாகக் கூறி, 44 மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச் கைது செய்யப்பட்டார்.

ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கார்ல் எரிக் ரின்ச், 2018 ஆம் ஆண்டில் ஒய்ட் ஹார்ஸ் என்ற தலைப்பில் இணையத் தொடரை இயக்குவதற்காக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திடமிருந்து 44 மில்லியன் டாலர் பெற்றிருந்தார். ஆனால், படத்துக்கான பணத்தை அதற்காக செலவழிக்காமல், தனது சொந்த தனிப்பட்ட செலவுகளுக்காக செலவழித்துள்ளார்.

கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் முதலீடு, ஆடம்பர சொகுசு விடுதிகள், 3.7 மில்லியன் டாலர் மதிப்பில் தளவாடங்கள் மற்றும் பழங்கால பொருட்களில் படுக்கைகள், மெத்தைகள் மற்றும் ஆடம்பர படுக்கைகளுக்கு 1 மில்லியன் டாலர், 5 ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஒரு ஃபெராரி கார், 6.5 லட்சம் மதிப்பில் கைக்கடிகாரங்கள் மற்றும் ஆடைகள், இதுதவிர 1.8 டாலருக்கு கிரெடிட் கார்டு பில்களுக்காவும் செலவழித்துள்ளார்.

இதையும் படிக்க:டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்!

இதனிடையே, படத்துக்கான பணத்தை மோசடி செய்ததாகக் கூறி, கார்ல் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 12 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், செவ்வாய்க்கிழமையில் ஒரு லட்சம் டாலர் அளித்து கார்ல் ஜாமீனில் வெளிவந்தார்.

கார்லின் மோசடி, நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள்வரையில் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இந்த நிலையில், கார்ல் மீதான கைது நடவடிக்கை குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது. லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகள... மேலும் பார்க்க

அமெரிக்கா: நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்தவர்கள் எடுத்த ... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு! 6 பேர் பலி; 4 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்

லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் மீது இஸ்ரேல் தினமும் தொடர்ந்து வான்வழி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச் 23) மருத்துவமனையிலிருந்து திரும்புவார் (டிஸ்சார்ஜ்) என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்து... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்

‘இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளா்ந்துள்ளது’ என்று நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமராக கடந்... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே க... மேலும் பார்க்க