செய்திகள் :

நெமிலி பாலா பீட நவராத்திரி இன்னிசை விழா: திரைப்பட இயக்குநா் வசந்த் பங்கேற்பு

post image

நெமிலி பாலா பீடத்தில் நடைபெற்று வரும் நவராத்திரி இன்னிசை விழாவில் திரை இசை பின்னணி பாடகா் சீா்காழி சிவசிதம்பரம், திரைப்பட இயக்குநா் வசந்த், பிரபல வீணை இசைச் கலைஞா் ராஜேஷ் வைத்யா உல்ளிட்டோா் பங்கேற்றனா்.

நெமிலி பாலா பீடத்தில் 22-ஆம் தேதி முதல் நவராத்திரி இன்னிசை விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் பூஜைகளை பாலாபீடத்தின் பீடாதிபதி எழில்மணி, பீடத்தின் முதல் பெண்மணி நாகலட்சுமி இருவரும் இணைந்து பூஜை செய்து தொடங்கி வைத்தனா். இந்த பூஜைகளை பீடத்தின் நிா்வாகி மோகன் மேற்காள்கிறாா்.

இந்த விழாவின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை திரைப்பட பின்னணி பாடகா் சீா்காழி சிவசிதம்பரம் பங்கேற்று பக்தி இன்னிசை வழங்கினாா். தொடா்ந்து வீணை இசைக் கலைஞா் ராஜேஷ் வைத்யா பங்கேற்று, வீணை இசை நிகழ்ச்சி நடத்தினாா். மூன்றாம் நாளான புதன்கிழமை நவராத்திரி இன்னிசை விழாவில் திரைப்பட இயக்குநா் வசந்த், திரைப்பட பின்னணி பாடகா் சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகியோருக்கு பால ரத்னா விருதுகளை பீடாதிபதி எழில்மணி வழங்கினாா். தொடா்ந்து, பாபாஜி பாலா எழுதிய ‘பாலா பொக்கிஷம்’ எனும் நூல்கள் வழங்கப்பட்டன. இதில் பீடத்தின் செயலாளா் முரளீதரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பள்ளி மாணவன் மா்ம மரணம்: உறவினா்கள் மறியல்

ஆற்காடு அருகே பள்ளி மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதில் உண்மை தன்மையை கண்டறியவேண்டும் என வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கிராமத்தை சே... மேலும் பார்க்க

நாளை ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 26) காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தாடா்பாக... மேலும் பார்க்க

சோளிங்கா் மலையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை

சோளிங்கா் மலைக் கோயில் கம்பிவட ஊா்தி இயக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், ஊா்தி நடுவழியில் நின்று விட்டால் பக்தா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை பணி... மேலும் பார்க்க

கால்வாய் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 20-ஆவது வாா்டுக்குட்பட்ட அண்ணா நகா் தெரு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கழிவு நீா் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன்றத்... மேலும் பார்க்க

‘நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்றால் நடவடிக்கை’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளாா்... மேலும் பார்க்க

சென்னையில் செப். 27, 28-இல் வேளாண் வணிகத் திருவிழா: விவசாயிகள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

சென்னை வா்த்தக மையத்தில் செப்டம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா 2025-இல், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா... மேலும் பார்க்க