செய்திகள் :

நெய் விலை குறைப்பு; ஆனால், தள்ளுபடி ரத்து! மற்றவை விலை குறையாதா? ஆவின் அமைதி!

post image

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் விலை திங்கள்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 5%, 18% என்ற இரு அடுக்குகளில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற கொழுப்பு அதிகமுள்ள பால் வகைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அமுல், நந்தினி போன்ற பிற மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்கள், மதர் டெய்ரி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பொருள்களின் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தன.

ஆனால், தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனமான ஆவின், விலைக் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது குறித்து கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், ஆவின் நிறுவனமும் இன்று பால் பொருள்களின் விலையைக் குறைத்து புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஒரு லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 700 இல் இருந்து ரூ. 660 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பன்னீர் விலை (500 கிராம்) ரூ. 300 இல் இருந்து ரூ. 275 ஆகவும், பதப்படுத்தப்பட்ட பால் (யுஎச்டி பால்) 150 மிலி ரூ. 12 இல் இருந்து ரூ. 10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பின்படி, 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 3,600 இல் இருந்து ரூ. 3,250 ஆக குறைக்கப்பட்ட நிலையில், இந்த வகை பொருளுக்கு ஆவின் அளித்து வந்த ரூ. 50 தள்ளுபடியை இன்றுமுதல் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், முன்பு அளிக்கப்பட்ட தள்ளுபடியை சேர்ந்து தற்போது 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 3,300 -க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 15 லிட்டர் நெய் டின்னுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 175 தள்ளுபடியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 5 சதவிகித ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கப்பட்ட தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பொருள்களின் விலையை ஆவின் நிறுவனம் குறைக்கவில்லை.

இதேபோல், 12 சதவிகித ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்ட வெண்ணெய், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற பொருள்களின் விலை குறைப்பு குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.

ஆனால், கர்நாடக பொதுத் துறை நிறுவனமான நந்தினி, தயிர், மோர், வெண்ணெய், பாதாம் பொடி, சாக்லேட், ஐஸ் கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களின் விலையையும் குறைத்துள்ளது.

ஆவின் நிறுவனமும் அடுத்தடுத்து வெண்ணெய், ஐஸ்கிரீம், லஸ்ஸி, மில்க் ஷேக் போன்ற பிற பொருள்களின் விலையையும் குறைத்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The prices of Aavin dairy products were reduced on Monday following the GST tax reduction.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்புக்கு பிறகும் ஆவின் விலை குறைக்கப்படாதது ஏன்?

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று(செப். 22, திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வர... மேலும் பார்க்க

அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று(செப். 22) சந்தித்துள்ளார்.சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில், தினகரனுடன் அண்ணாமலை சுமார் 2 மணி நேரம் பே... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு இல்லை! ஆனால் தள்ளுபடி விலையில்...

ஜிஎஸ்டி வரிகளில் இரண்டு விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரண்டு அடுக்கு நடைமுறையை கொண்டுவந்ததையடுத்து பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று(செப்.22) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூல... மேலும் பார்க்க

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 உயர்ந்துள்ளது.உலக நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போ... மேலும் பார்க்க

வங்கக்கடலில் செப்.25ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

தமிழகத்தில் வருகின்ற 25-ஆம் தேதியில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிம... மேலும் பார்க்க

நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,... மேலும் பார்க்க