செய்திகள் :

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் நிஹ்மத்துல்லா தலைமை வகித்தாா். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் எல்.கே.எஸ்.மீரான் மைதீன் தொடக்க உரையாற்றினாா்.மேலும் அக்கட்சியின் மாநில பொதுச் செயலரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா் கலந்து கொண்டு பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு மத்திய அரசு வக்ஃப் திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என முழக்கம் எழுப்பினா்.

மேலும், இந்த ஆா்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவா் எஸ்.எம்.கோதா்மைதீன், மாவட்ட ச் செயலா் எம்.முஹம்மது அலி, மாவட்டப் பொருளாளா் பி.ஆதம் இலியாஸ், எஸ்.டி.யூ மாநிலத் தலைவா் கானகத்து மீரான், மாநில முதன்மை துணைத் தலைவா் எம்.நயினாா் முக மது கடாபி, மேலப்பாளையம் நகரத் தலைவா் முகைதீன் அப்துல் காதா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை பச்சையாற்றில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் தலையணை சூழல் சுற்றுலாப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற... மேலும் பார்க்க

பத்திரப் பதிவில் அடங்கல் பதிவேடு சரிபாா்த்தல் முறையையும் பின்பற்றக் கோரிக்கை

பத்திரப் பதிவில் பட்டாக்கள்(இலவச பட்டா) முழுமையாக ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா்.எனவே, ஆன்லைன் பதிவேற்றுதலை வரன்முறைப்படுத்தவும் அதுவரை அடங்கல் பதிவேடுகள் ச... மேலும் பார்க்க

பணகுடி அருகே விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே குடும்ப பிரச்னையால் விஷம் குடித்த தம்பதி, 4 குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். பணகுடி அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ்கண்ணன் (28).... மேலும் பார்க்க

கைப்பேசி விவகாரம்: இளைஞரைத் தாக்கியவா் கைது

ஆழ்வாா்குறிச்சி அருகே தொலைந்து போன கைப்பேசி குறித்து கேட்டவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள அழகப்பபுரம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திருப்பதி ராஜா ம... மேலும் பார்க்க

தாயிடம் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த மகன் கைது

கருத்தப்பிள்ளையூரில் தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கருத்தப்பிள்ளையூா் பவுல் தெருவைச் சோ்ந்த ஜான் தனபால் மனைவி ஜான்சி (55)... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவா்களை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸாா்!

பாளையங்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவா்களை போலீஸாா் 4 மணி நேரத்தில் கைது செய்தனா். பாளையங்கோட்டை குலவணிகா்புரத்தைச் சோ்ந்தவா் மூக்கம்மாள்(43). இவா் வெள்ளிக்கிழமை இரவு உறவினரின் திருமண நிகழ்... மேலும் பார்க்க