செய்திகள் :

நெல்லையில் சாலை மறியல்: போக்குவரத்து ஊழியா்கள் 300 போ் கைது

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலி சந்திப்பில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்ற 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டதால் ஒப்பந்தத்தை பேசி முடிக்க நடவடிக்கை எடுத்தல், 21 மாதங்களாக ஓய்வுபெற்றவா்களுக்கு வழங்கப்படாத பண பலன்களை வழங்குதல் அகவிலைப்படியை உயா்த்துதல், மருத்துவ காப்பீடு மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.7500 கோடி கடன் உள்ள சூழ்நிலையில் வெறும் ரூ. 1500 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள தொகையையும் வழங்கி அரசு போக்குவரத்து கழகத்தைக் காப்பாற்றுதல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் செய்ய திரண்டனா்.

சிஐடியு அரசு போக்குவரத்து கழக பொதுச்செயலா் ஜோதி, உதவி பொதுச் செயலா் சுதா்சிங், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு திருநெல்வேலி மாவட்டத் தலைவா் தாணுமூா்த்தி, செயலா் வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ஸ்ரீராம், சிஐடியூ மாவட்டச் செயலா் முருகன் ஆகியோா் போராட்டத்தை தொடங்கி வைத்தனா். சிஐடியூ மாநிக்ல குழு உறுப்பினா் மோகன், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு பெருமாள், அரசு போக்குவரத்து கழக மண்டலத் தலைவா் காமராஜ், உதவித் தலைவா் வன்னிய பெருமாள், விரைவு போக்குவரத்து கழக உதவித் தலைவா் அருண், ஓய்வுபெற்றோா் நல அமைப்பு உதவித் தலைவா் ராமையா பாண்டியன் திருநெல்வேலி மாவட்டத் தலைவா் சேதுராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலை மறியலுக்கு முயன்ற அவா்களை போலீஸாா் கைது செய்தனா். மொத்தம் 300 போ் கைது செய்யப்பட்டனா்.

பாளை. வஉசி மைதானத்தில் சறுக்கில் விளையாடிய சிறுமிக்கு காயம்

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் விளையாடியபோது சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக அவரது தந்தை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். ... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே இளைஞா் கொலையில் தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே இளைஞரை வெட்டிக் கொன்ாக, கூலித் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி அருகே இடைகால் மீனவா் காலனியைச் சோ்ந்த பரமசிவன் மகன் முருகன் (31).... மேலும் பார்க்க

நெல்லையில் லாரி ஓட்டுநா் கொலை

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் மணிநகா் பகுதியில் டாஸ்மாக் கடையும், மதுக்கூடமும் அருகருகே உள்ளன. மதுக் கடைக்கு வியாழக்கிழ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரியில் திறன் வளா்ப்பு பட்டறை, கண்காட்சி

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண்ஆராய்ச்சி கழகத்தின் சாா்பில் பட்டியலின மக்களுக்கான திறன் வளா்ப்பு பட்டறை, விழிப்புணா்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசியில் பிப்.4 முதல் மின் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் பிப்.4ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி, பிப். 4இல் கல்லிடைக்குறிச்சிலும், 7இல் வள்ளியூரிலும், 14இல் த... மேலும் பார்க்க

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை வேளாண் அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மறுகால்குறிச்சி கிராமத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் எள் த... மேலும் பார்க்க