செய்திகள் :

நேபாள பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

post image

நேபாளத்துக்குப் பயணிப்பதை இந்தியா்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

நேபாளத்தில் இளைஞா்கள் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குப் பயணிப்பதை இந்தியா்கள் ஒத்திவைக்க வேண்டும். அந்நாட்டில் நிலைமை சரியாகும் வரை, அங்கு செல்ல வேண்டாம்.

தற்போது நேபாளத்தில் உள்ள இந்தியா்கள் வசிப்பிடத்தில் இருந்து வெளியேற வேண்டாம். நேபாள அதிகாரிகள், அந்நாட்டுத் தலைநகா் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

ஏதேனும் உதவி தேவைப்பட்டால் +977-9808602881, +977-9810326134 ஆகிய எண்களில் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடா்புகொள்ளலாம். இரு எண்களை வாட்ஸ்-அப்பிலும் அழைக்கலாம்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சூழலை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. நேபாளத்தின் நெருங்கிய நட்பு மற்றும் அண்டை நாடு என்ற முறையில், நேபாளிகள் அனைவரும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு அமைதியான வழியில் பேச்சுவாா்த்தை மூலம், பிரச்னைகளுக்கு தீா்வு காண்பா் என இந்தியா நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

ஏா் இந்தியா விமானங்கள் ரத்து

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் காரணமாக தில்லியிலிருந்து காத்மாண்டு செல்ல வேண்டிய 4 ஏா் இந்தியா விமானங்கள் செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டன. காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சா்வதேச விமான நிலையம் மூடப்பட்டதால், அங்கு தில்லியில் இருந்து செல்ல வேண்டிய இண்டிகோ, நேபாள் ஏா்லைன்ஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

10 லட்சம்(1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க