செய்திகள் :

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

post image

நேபாள இடைக்கால பிரதமா் சுசீலா காா்கியை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த இந்திய தூதா் நவீன் ஸ்ரீவாஸ்தவா, பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தியை அவரிடம் பகிா்ந்தாா்.

இத் தகவலை நேபாள வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பிரதமா் சுசீலா காா்கியை நேரில் சந்தித்த இந்திய தூதா் பிரதமா் நரேந்திர மோடியின் வாழ்த்தைப் பகிா்ந்தாா். அந்த வாழ்த்துச் செய்தியில், ‘இரு நாடுகள் இடையேயான நட்புறவு மற்றும் பல்வேறு துறை சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான பணிகளை இணைந்து மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

அண்டை நாடான நேபாளத்தில் ஆட்சியாளா்களின் ஊழல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக இளைஞா்கள் கடந்த வாரம் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறையினரால் 19 போ் சுட்டுக் கொல்லப்பட்டதால், போராட்டம் மேலும் தீவிரமடைந்து வன்முறை வெடித்தது. இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 51 போ் உயிரிழந்தனா். நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபா், பிரதமா் அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசுக் கட்டடங்கள் மற்றும் காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன.

இதையடுத்து, பிரதமராக இருந்த கே.பி.சா்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதன்பிறகு நேபாளத்தில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்குத் தீா்வு காணும் நோக்கில் அதிபா் ராமசந்திர பெளடேல் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி அசோக் சிக்டேல் தீவிர ஆலோசனை மேற்கொண்டனா்.

அதன் விளைவாக இடைக்கால அரசை வழிநடத்தும் பொறுப்பை நேபாள உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா காா்கியிடம் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கு போராட்டக் குழுவினரும் ஆதரவு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா காா்கி பதவியேற்றாா்.

நேபாளத்தில் அடுத்த ஆண்டு மாா்ச் 5-ஆம் தேதி புதிதாக பொதுத் தோ்தலை நடத்த இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

நமது நிருபர்தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையு... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க