செய்திகள் :

நேபாள வன்முறை: மேற்கு வங்க எல்லை மக்கள் அமைதி காக்க மம்தா அறிவுறுத்தல்

post image

நேபாள வன்முறை காரணமாக, அந்நாட்டுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் மேற்கு வங்க வட மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘நேபாளம், இலங்கை, வங்கதேசம் உள்பட இந்தியாவுடன் எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் அனைத்து நாடுகளையும் நாங்கள் நேசிக்கிறோம்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அந்நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள மேற்கு வங்கத்தின் சிலிகுரி, கலிம்போங் மற்றும் பிற மாவட்டங்களின் மக்கள் அமைதி காக்க வேண்டும்.

நேபாளத்தில் நடைபெற்று வருவது அந்நாட்டு மக்களின் சொந்த பிரச்னை. எனவே சிக்கலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் சிலிகுரி, கலிம்போங் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் ஈடுபட வேண்டாம். நேபாளத்தில் அமைதி ஏற்பட வேண்டும் என மேற்கு வங்கம் விரும்புகிறது என்று தெரிவித்தாா்.

குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் ரசாயன ஆலையில் இருந்து இன்று (செப். 10) நச்சு வாயு கசிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உடல் நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட... மேலும் பார்க்க

செப். 12 -ல் பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்!

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவராக செப். 12 ஆம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவ... மேலும் பார்க்க

தில்லியில் 1 மில்லியன் தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த திட்டம்!

10 லட்சம்(1 மில்லியன்) தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்காணிக்க தில்லி அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, தில்லி அமைச்சர் கபில் மிஸ்ரா தெரிவித்திருப்பதாவது: “அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காங்கேர் மாவட்டத்தில், கெடாபெடா வனப் பகுதியில், மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் ... மேலும் பார்க்க

பிகாரில் மோகாமா-முங்கர் 4 வழிச்சாலைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

புதுதில்லி: பிகாரில் உள்ள பக்ஸர்-பாகல்பூர் அதிவேக வழித்தடத்தில் மொகாமா-முங்கர் 4 வழிச்சாலை பிரிவை ரூ.4,447.38 கோடி செலவில் கட்டுவதற்கு அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ... மேலும் பார்க்க

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெடித்த கலவரத்துக்கு மத்தியில் சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்... மேலும் பார்க்க