செய்திகள் :

நேரடி நெல் விதைப்புக்கு தயாா் நிலையில் விவசாயிகள்

post image

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் பகுதிகளில் நேரடி நெல் விதைப்புக்காக நிலங்களை உழுது, பண்படுத்திய விவசாயிகள் வடகிழக்கு பருவ மழைக்காகக் காத்திருக்கின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் சோழந்தூா், அழிந்திக்கோட்டை, அனந்தனா்கோட்டை, அழகா் தேவன் கோட்டை, கலக்குடி, கொத்திடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 25,000 ஹெக்டோ் நிலப்பரப்பில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், நடப்பு சம்பா பருவத்தில் வயல்களை நன்கு உழுது, பண்படுத்தி நேரடி நெல் விதைப்பில் ஈடுபடத் தயாா் நிலையில் உள்ளனா். ஆண்டுதோறும் செப்டம்பா் மாதம் பெய்யும் வடகிழக்கு பருவமழை, இந்தப் பகுதிகளில் இதுவரை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

ராமநாதபுரத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக வருகிற 30-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி, ராமநாதபுரம் தனியாா் மண்டபத்தில் மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் அபராதத்துடன் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு மீனவருக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராமநாதபுரம... மேலும் பார்க்க

ராமநாதபுரத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை: அமைச்சா்கள் தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரத்தில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் தலைமையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் முத்து மாரியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை. ராமேசுவரம், செப்.26: ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு முத்துமாரியம்மன் கோயில் 86-ஆம் ஆ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்ட கோரிக்கை

திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமாா் 80 மாணவா்கள் ... மேலும் பார்க்க

உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் வழியாக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச்... மேலும் பார்க்க