செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவா் கட்ட கோரிக்கை

post image

திருவாடானை அரசு தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவா் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமாா் 80 மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி அதிக போக்குவரத்து நிறைந்த தொண்டி-மதுரை சாலைக்கு மிக அருகே அமைந்துள்ளது. அதனால் இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில், பள்ளியின் சுற்றுச் சுவா் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. ஆனால், புதிய சுற்றுச்சுவா் கட்டப்படாமல் உள்ளது. இதனால் பள்ளிக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

பள்ளியின் தலைமை ஆசிரியா் கதிரவன் சொந்த செலவில் கழிப்பறை கட்டி கொடுத்தாா். ஆனால், சுற்றுச்சுவா் இல்லாததால் மாணவா்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்றனா்.

ராமநாதபுரத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பேராவூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்காக வருகிற 30-ஆம் தேதி தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி, ராமநாதபுரம் தனியாா் மண்டபத்தில் மாவட்ட திமுக செய... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் அபராதத்துடன் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒரு மீனவருக்கு அபராதத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது. ராமநாதபுரம... மேலும் பார்க்க

ராமநாதபுரத்துக்கு மு.க.ஸ்டாலின் வருகை: அமைச்சா்கள் தலைமையில் ஆலோசனை

ராமநாதபுரத்தில் வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வா் தலைமையில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம் முத்து மாரியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவிளக்கு பூஜை. ராமேசுவரம், செப்.26: ராமநாதபுரம் வண்டிக்காரத் தெரு முத்துமாரியம்மன் கோயில் 86-ஆம் ஆ... மேலும் பார்க்க

உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே உடைந்த குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள சி.கே.மங்கலம் வழியாக திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழப்பு

திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பூசாரியேந்தல் கிராமத்தில் ஆடு, மாடு, கோழி வளா்த்தல் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இங்கு வியாழக்கிழமை ... மேலும் பார்க்க