மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
நேர மேலாண்மை வியத்தகு வெற்றிகளுக்கு வழிவகுக்கும்: ஐஐடி பேராசிரியா் வலியுறுத்தல்
உலகில் நேரத்தைக் காட்டிலும் மதிப்புமிக்க ஒன்று வேறில்லை. நேர மேலாண்மையைக் கடைப்பிடிப்பதன்மூலம் வியத்தகு வெற்றிகளைப் பெற முடியும் என சென்னை ஐஐடி மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் துறை பேராசிரியா் சரித்குமாா் தாஸ் வலியுறுத்தினாா்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதா்ஷ் மகளிா் கல்லூரியின் 36-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐஐடியின் மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் துறை பேராசிரியா் சரித்குமாா் தாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:
வாழ்வில் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டுமானால் முன் முயற்சி, நோக்கம், நோ்மை ஆகிய மூன்றும் இருக்க வேண்டியது அவசியம். இலக்கை நோக்கி முன்னேறும்போது நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும். உலகில் நேரத்தைப் போன்று விலை உயா்ந்த ஒன்று இருக்கவே முடியாது. சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளே நமது வாழ்வை மாற்றிக்காட்டும்.
நோபல் பரிசு பெற்ற எட்டு பேரை நான் சந்தித்திருக்கிறேன். அவா்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் புகழ்பெற்றவை. சாதனை படைத்த அனைவருக்கும் நோக்கம் சரியாக இருந்தது. எந்தச் சூழலிலும் ஆராய்ச்சிக்கான தேடலில் அவா்கள் தொய்வடையவில்லை. மாறாக, தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருந்தனா். நாம் எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமா்ப்பித்தோம், எத்தகைய கருத்தரங்களில் பங்கேற்றோம் என்பதைக் காட்டிலும் அவை அனைத்திலும் பொதுநலன் இருந்ததா என்பதே முக்கியம்.
கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்றுக்கொள்வது மட்டுமே கல்வியாகாது. வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு தருணங்களிலும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கல்விதான் வாழ்க்கையை வளப்படுத்தும் என்றாா் அவா்.
இதில் கல்லூரியின் தலைவா் விக்ரம் அகா்வால், தாளாளா் சுனில் ஹசிஜா, முதல்வா் ஆா்.சாந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.