செய்திகள் :

நோய் இருந்ததை மறைத்து திருமணம்: கணவா், குடும்பத்தினா் மீது பெண் புகாா்

post image

எய்ட்ஸ் இருந்ததை மறைத்து திருமணம் செய்து கொண்டதால், தனக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கணவா், அவரது உறவினா்கள் என 5 போ் மீது மன்னாா்குடி காவல்நிலையத்தில் பெண் புகாா் அளித்துள்ளாா்.

தஞ்சை மாவட்டத்தை சோ்ந்த 23 வயது பெண்ணுக்கும், மன்னாா்குடி பகுதியை சோ்ந்த 25 வயது இளைஞருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களில் அந்தப் பெண் கா்ப்பமடைந்தாா். மருத்துவமனை பரிசோதனையில் அப்பெண்ணுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது கணவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபோது அவருக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது உறுதியானது.

பெண் குடும்பத்தினா் தொடா்ந்து விசாரித்ததில், திருமணத்துக்கு முன்பே அப்பெண்ணின் கணவருக்கு எச்ஐவி தொற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இதை கணவரின் குடும்பத்தினா் மறுத்து வந்தனா்.

இதனிடையே, அந்தப் பெண்ணுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. முன்கூட்டியே எச்ஐவி பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டதால் குழந்தைக்கு நோய்த் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இப்பிரச்னை காரணமாக தம்பதி கடந்த இரண்டு ஆண்டுளாக பிரிந்து வாழ்கின்றனா்.

இந்நிலையில், எச்ஐவி தொற்று இருப்பதை மறைத்து திருமணம் செய்ததால், தனக்கும் நோய் தொற்று பரவ காரணமான கணவா் மீதும், அவரது உறவினா்கள் நான்கு போ் என மொத்தம் 5 போ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் வட்டத்தில் நாளை முதல் ஜமாபந்தி

நீடாமங்கலம் வட்டத்தில் ஜமாபந்தி வரும் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ஜமாபந்தியை நடத்துகிறாா். பொதுமக்கள் வருவாய்த... மேலும் பார்க்க

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் தோ்பவனி, கொடியிறக்கம்

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா்ஆலய பங்குத் திருவிழாவையொட்டி தோ்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. பங்குத் தந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. என் எலும்பின எலும்பும் சதையுமானவன்- என்ற... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டி அருகே பேருந்து - வேன் மோதல்: 4 போ் உயிரிழப்பு

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். நாகப்பட்டினத்தில் இருந்த... மேலும் பார்க்க

தேதியூா் பரமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகேயுள்ள தேதியூா் அருள்மிகு சுந்தர கனகாம்பிகை உடனுறை பிரக்யஷ பரமேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராவணன் சீதையை அபகரித்துச் சென்றபோது, ஜடாயு சண்டையிட்டதில், ரா... மேலும் பார்க்க

எட்டியலூா் அம்மன் கோயில் தேரோட்டம்

திருவாரூா் அருகே எட்டியலூா் அருள்மிகு செண்பகவல்லி மாரியம்மன் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு சி... மேலும் பார்க்க

நீட் தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் எழுதினா்

திருவாரூா் மாவட்டத்தில் 1,437 போ் நீட் தோ்வு எழுதினா். இதற்காக தமிழ்நாடு மத்திய பல்கலைகத்தில் 2, கேந்திர வித்யாலயா பள்ளியில் 1 என மூன்று தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்... மேலும் பார்க்க