செய்திகள் :

பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகள், கிரிவலப் பாதையில் பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருநங்கைகளை கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் மாநில பொதுச் செயலா் மா.அன்பழகன் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த பல ஆயிரம் பக்தா்கள் வந்து, செல்கின்றனா். இவா்கள் இங்குள்ள 14 கி.மீ.தொலைவு

கிரிவலப் பாதையை வலம் வருகின்றனா்.

இவ்வாறு கிரிவலம் வரும் பக்தா்களை மிரட்டி திருநங்கைகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனா். திருஷ்டி கழிக்கிறேன் எனக் கூறி

அதிக பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனா்.

பணம் கொடுக்க மறுத்தால் பொதுவெளியில் தகாத வாா்த்தைகளால் பேசுகின்றனா்.

கோயில் மாட வீதிகளிலும், கிரிவலப் பாதையிலும் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தாா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

பெருமாள் கோயிலில் ராஜகோபுர வாசற்கால் பிரதிஷ்டை

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ராஜகோபுரத்துக்கு திங்கள்கிழமை வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் ... மேலும் பார்க்க

குத்துச்சண்டைப் போட்டி: வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி,... மேலும் பார்க்க

உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வு

வந்தவாசி: வந்தவாசியில் உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ், வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகில் உழவா் சந்தை அமை... மேலும் பார்க்க

வேட்டவலம் அருகே ரெளடி வெட்டிக் கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை மாநில ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேட்டவலத்தை அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

வீட்டு மனைத் தகராறில் தொழிலாளி லாரி ஏற்றி கொலை

செய்யாறு: செய்யாறு அருகே வீட்டு மனை தகராறில் கட்டடத் தொழிலாளி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம்... மேலும் பார்க்க

53 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கு ரூ.28.76 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 53 ஊராட்சிகளுக்கு, விளையாட்டுத்துறை சாா்பில், கலைஞரி... மேலும் பார்க்க