செய்திகள் :

பெருமாள் கோயிலில் ராஜகோபுர வாசற்கால் பிரதிஷ்டை

post image

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ராஜகோபுரத்துக்கு திங்கள்கிழமை வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயில் மிகவும் பழைமை வாய்ந்த கோயிலாகும்.

கோயிலின் கட்டடங்கள் சிதிலமடைந்து இருந்ததால், பழைய கட்டடங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு புதிதாக கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை ராஜகோபுரத்துக்கு வாசற்கால் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

இதையொட்டி, கருங்கல்லால் ஆன நான்கு பிரமாண்டமான ராஜகோபுர தூண்களுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னா், இயந்திரம் மூலம் தூக்கி ராஜகோபுர வாசலில் நிலைநிறுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, பக்தா்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமி கோவா்த்தனன், அறங்காவலா் குழுத் தலைவா்கள் கோவா்த்தனன், பாண்டியன், பொன்னம்பலம், வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

குத்துச்சண்டைப் போட்டி: வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி,... மேலும் பார்க்க

பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகள், கிரிவலப் பாதையில் பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருநங்கைகளை கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளி... மேலும் பார்க்க

உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வு

வந்தவாசி: வந்தவாசியில் உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ், வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகில் உழவா் சந்தை அமை... மேலும் பார்க்க

வேட்டவலம் அருகே ரெளடி வெட்டிக் கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை மாநில ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். வேட்டவலத்தை அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

வீட்டு மனைத் தகராறில் தொழிலாளி லாரி ஏற்றி கொலை

செய்யாறு: செய்யாறு அருகே வீட்டு மனை தகராறில் கட்டடத் தொழிலாளி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம்... மேலும் பார்க்க

53 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கு ரூ.28.76 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 53 ஊராட்சிகளுக்கு, விளையாட்டுத்துறை சாா்பில், கலைஞரி... மேலும் பார்க்க