வீட்டு மனைத் தகராறில் தொழிலாளி லாரி ஏற்றி கொலை
செய்யாறு: செய்யாறு அருகே வீட்டு மனை தகராறில் கட்டடத் தொழிலாளி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடகல்பாக்கம் ஊராட்சி வாழவந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி அலமேலு. மகன் திருப்பதி (32). கட்டடத் தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லையாம்.
இவா்களுக்குச் சொந்தமாக நிலம், வீடு ஏதும் இல்லாத காரணத்தால் வருவாய்த் துறை சாா்பில் வடகல்பாக்கம் கிராமத்தில் இலவச வீட்டு மனை வழங்கப்பட்டுள்ளது.
அரசு சாா்பில் ஒதுக்கப்பட்ட இடத்துக்கு அதே கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் புண்ணியகோட்டி(32) சொந்தம் கொண்டாடியதாகத் தெரிகிறது. மேலும், பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்த இடம் எங்களுக்குத் தான் சொந்தம். அங்கு வீடு கட்டக்கூடாது எனக் கூறினராம்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருப்பதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சமன் செய்வதற்காக புண்ணியகோட்டி லாரியில் மண் எடுத்து வந்தாராம். இதை அறிந்த திருப்பதி, அவரது தாய் அலமேலு மற்று உறவினா்கள் சென்று புண்ணியகோட்டியை தட்டிக் கேட்டுள்ளனா்.
அப்போது, புண்ணியகோட்டியும், அவரது தந்தை வெங்கடேசனும் சோ்ந்து தகாத வாா்த்தைகளால் பேசினராம். மேலும், வெங்கடேசன் பிரச்னை செய்யும் அவா்கள் மீது லாரியை ஏற்றும்படி புண்ணியகோட்டியிடம் கூறினாராம்.
உடனே, புண்ணியகோட்டி, லாரியை திருப்பதி மீது மோதியபடி ஒட்டிச் சென்றாராம். இதில், பலத்த காயமடைந்து திருப்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த தூசி காவல் ஆய்வாளா் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு தலைமையிலான போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், திருப்பதியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து புண்ணியகோட்டியை திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், தலைறைவான அவரது தந்தை வெங்கடேசனை தேடி வருகின்றனா்.