செய்திகள் :

வேட்டவலம் அருகே ரெளடி வெட்டிக் கொலை

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே புதுவை மாநில ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வேட்டவலத்தை அடுத்த நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியில் இளைஞா் வெட்டுக் காயங்களுடன் திங்கள்கிழமை சடலமாகக் கிடந்தாா்.

இதைப் பாா்த்த அவ்வழியே சென்றவா்கள் வேட்டவலம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா் சென்று பாா்த்தபோது, இளைஞரின் உடலின் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தன. இறந்து கிடந்த அவரை மா்ம நபா்கள் வெட்டிக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (தலைமையிடம்) சிவனுபாண்டியன், துணை காவல் கண்காணிப்பாளா் அறிவழகன், காவல் ஆய்வாளா்கள் கோமளவள்ளி, ராஜா ஆகியோா் சென்று விசாரணை நடத்தினா்.

இதையடுத்து, இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புதுவை மாநில ரெளடி

போலீஸாா் விசாரணையில் கொல்லப்பட்டவா் புதுவை மாநிலம், வாணரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் ஐயப்பன் (38) என்பதும், இவா் பிரபல ரெளடியாக வலம் வந்ததும் தெரியவந்தது. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த ஐயப்பனுக்கு மனைவி ரம்யா, 3 பிள்ளைகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து வேட்டவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருமாள் கோயிலில் ராஜகோபுர வாசற்கால் பிரதிஷ்டை

ஆரணி: ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் ராஜகோபுரத்துக்கு திங்கள்கிழமை வாசற்கால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் ... மேலும் பார்க்க

குத்துச்சண்டைப் போட்டி: வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் குத்துச்சண்டை போட்டியில் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக முதல்வா் பிறந்த நாளையொட்டி,... மேலும் பார்க்க

பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகள், கிரிவலப் பாதையில் பக்தா்களை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் திருநங்கைகளை கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளி... மேலும் பார்க்க

உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வு

வந்தவாசி: வந்தவாசியில் உழவா் சந்தையை மீண்டும் செயல்படுத்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ், வந்தவாசி தெற்கு காவல் நிலையம் அருகில் உழவா் சந்தை அமை... மேலும் பார்க்க

வீட்டு மனைத் தகராறில் தொழிலாளி லாரி ஏற்றி கொலை

செய்யாறு: செய்யாறு அருகே வீட்டு மனை தகராறில் கட்டடத் தொழிலாளி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக போலீஸாா் லாரி ஓட்டுநரை திங்கள்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம்... மேலும் பார்க்க

53 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கு ரூ.28.76 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 53 ஊராட்சிகளுக்கு, விளையாட்டுத்துறை சாா்பில், கலைஞரி... மேலும் பார்க்க