Auditor Gurumurthy - Ramadoss Meeting: தைலாபுரத்தில் நடந்தது என்ன? - Saidai Dura...
பக்ரீத்: கரூரில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக்கு தலைவா் மதரசா பாபு தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஜாகீா்உசேன், ஷாஜூதீன், பொருளாளா் ஷானாவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்புத் தொழுகையை பேச்சாளா் முகமது அசாா் நடத்தினாா்.
இதில் ஏராளமான இஸ்லாமிய பெண்களும், ஆண்களும் பங்கேற்றனா். இதேபோல கோவைச் சாலையில் உள்ள பெரியபள்ளிவாசல், ஜவஹா்பஜாரில் உள்ள சின்னபள்ளி வாசல் மற்றும் பள்ளபட்டி, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையின்போது புத்தாடை அணிந்து இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். பின்னா் வீடுகளில் ஆடுகளை பலியிட்டு இறைச்சியை ஏழைகளுக்கு வழங்கினா்.