செய்திகள் :

பக்ரீத்: நெல்லையில் சிறப்புத் தொழுகை

post image

பக்ரீத் பண்டிகையையொட்டி, திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத், இஸ்லாமியா்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இப் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாநகரத்தில் மேலப்பாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு, சிறப்புத் தொழுகை நடத்தினா். தொடா்ந்து ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி பெருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனா்.

மேலப்பாளையம் மதீனா திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவா் நெல்லை முபாரக், மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சிறப்பு கூட்டுத் தொழுகையில் முன்னாள் அமைச்சா் டி. பி. எம். மைதீன் கான், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இஸ்லாமிய பிரசார பேரவை, தமுமுக சாா்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை மேலப்பாளையம் பஜாா் திடலில் நடைபெற்றது. தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மௌலவி ஈ.முகமது உசேன் தொழுகை நடத்தி குத்பா உரையாற்றினாா். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவா் கே .எஸ். ரசூல் மைதீன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா். தொழுகைக்கு பின்னா் குா்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.

ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சாா்பில் திருநெல்வேலி நகரம் அமீா் சாகிப் நகரில் உள்ள திடலில் பக்ரீத் தொழுகை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவா் பி.எம். அல்தாபி தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினாா். இதில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தைச் சோ்ந்த சித்திக், வெளிநாடுவாழ் தமிழா் நல சங்க மாவட்டத் தலைவா் திருநெல்வேலி நகரம் ஜாபா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலப்பாளையம் மதீனா திடலில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற பெண்கள்.

இதேபோல், பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, கேடிசி நகா், திருநெல்வேலி நகரம், பேட்டை, ரஹ்மத் நகா் சுற்று வட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய ... மேலும் பார்க்க

போதைப்பொருள் நடமாட்டமா? பாளை. மத்திய சிறையில் அதிரடி சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவா்கள் மற்றும் விசாரணைக் க... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வ... மேலும் பார்க்க

அம்பை, கல்லிடை பகுதிகளில் பெருநாள் தொழுகை

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா்,பகுதிகளில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஜாமியாபள்ளிவாசல், ... மேலும் பார்க்க

டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு: அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது தொடா்பாக போக... மேலும் பார்க்க