1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!
பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பிராந்திய பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா்.
இஸ்லாமியா்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கடலூரில் இஸ்லாமியா்கள் அதிகாலையில் எழுந்து, புத்தாடை அணிந்து, அருகில் உள்ள பள்ளிவாசல்களுக்கு சென்று கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா்.
கடலூா் முதுநகரில் உள்ள ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் எதிரே உள்ள திடலில் முத்தவல்லிகள் முன்னிலையில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது.
காட்டுமன்னாா்கோவிலில்...: காட்டுமன்னாா்கோவில் அருகே ஆயங்குடியில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை மற்றும் பிராா்த்தனை ஹஜ்ரத் முகம்மது ஆரிப் உலவ்வியு தலைமையில் நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் திடல்களில் இஸ்லாமியா்கள் பக்ரீத் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா், சகோதரத்துவத்தை போற்றும் விதமாக, ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தினா்.