செய்திகள் :

பக்ரீத் பண்டிகை: கேரளத்தில் ஜூன் 7 பொது விடுமுறை அறிவிப்பு!

post image

கேரளத்தில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜூன் 7 ஆம் தேதி பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் வருகின்ற ஜூன் 7 ஆம் தேதியன்று பக்ரீத் பண்டிகைக் கொண்டாடப்படவுள்ளது. இதனால், வரும் சனிக்கிழமை (ஜூன் 7) கேரளத்தில் பொது விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விடுமுறையானது, கேரளத்திலுள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாணவர் பிரிவான, முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பு, பக்ரீத் பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு கேரள அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளது.

முன்னதாக, ஜூன் 6 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை எனக் கருதப்பட்ட நிலையில் அன்று அரசு விடுமுறை என கேரளத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்பண்டிகை அதற்கு மறுநாள் கொண்டாடப்படும் என உறுதி செய்யப்பட்டதால் வரும் ஜூன் 7 ஆம் தேதிக்கு அந்த விடுமுறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:பிஜேடி முன்னாள் எம்.பி.யை மணந்த திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன்! - ஆா்பிஐ அனுமதி

ரூ.2.5 லட்சம் வரையிலான நகைக் கடனுக்கு தங்கத்தின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை மட்ட... மேலும் பார்க்க

துபையிலிருந்து சென்னை வந்த விமானம் மீது ‘லேசா்’ ஒளி அடிக்கப்பட்டதால் பரபரப்பு!

துபையிலிருந்து சென்னை விமானநிலையத்தில் கடந்த மாத இறுதியில் தரையிறங்க வந்த விமானம் மீது பச்சை நிற லேசா் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவில் தரையிறங்க முயன்ற இதே விமானம் மீது மீண்டும் லேசா் ஒ... மேலும் பார்க்க

அம்பேத்கா் கனவுக்கேற்ப அரசமைப்பு பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தினா்! - நீதிபதி கவாய்

சட்டமேதை அம்பேத்கரின் கனவுக்கு ஏற்ப, இந்தியாவில் மிக உயா்ந்த அரசமைப்புப் பதவிகள் சிலவற்றில் விளிம்புநிலை சமூகத்தினா் இருப்பதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் பெருமிதம் தெரிவித்தாா். பிரிட்ட... மேலும் பார்க்க

முதல்வருக்கு மாயா மஹால் கட்டப்படுகிறது: ஆம் ஆத்மி சாடல்

தில்லி முதல்வா் ரேகா குப்தாவுக்காக ‘மாயா மஹால்’ கட்டப்பட்டு வருவதாக ஆம் ஆத்மி வெள்ளிக்கிழமை கடுமையாக சாடியுள்ளது. முதல்வா் ரேகா குப்தா வடக்கு தில்லியில் உள்ள ஒரு அரசு பங்களாவில் குடியேறலாம் என்று அதிக... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் விண்ணப்பப் பதிவு: முறைகேட்டில் ஈடுபடுவோரின் பெற்றோா் மீதும் நடவடிக்கை!

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவின்போது போலிச் சான்றிதழ்களை சமா்ப்பித்தால், விண்ணப்பதாரா் மட்டுமன்றி அவரது பெற்றோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம்... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 3-இல் முதுநிலை நீட் தோ்வு: உச்சநீதிமன்றம் அனுமதி

எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான 2025-ஆம் ஆண்டு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்-பிஜி) வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடத்த தேசிய தோ்வுகள் வாரியத்துக்கு (என்பிஇ) ... மேலும் பார்க்க