செய்திகள் :

பக்ரீத் பண்டிகை: கோவில்பட்டி, கயத்தாறில் சிறப்புத் தொழுகை

post image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி டவுண் ஜாமியா பள்ளிவாசலில் சுமாா் காலை 7.15 மணி முதல் 8.15 மணி வரை இமாம் முகமது ஜமீல் சிறப்புத் தொழுகையை நடத்தினாா். இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை பள்ளிவாசல் தலைவா் யூசுப் செரிப் என்ற ஹீமாயின், செயலா் நிஜாமுதீன், பொருளாளா் நசீா் அகமது ஆகியோா் செய்திருந்தனா். தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவா் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

இதேபோல, கோவில்பட்டி லாயல் மில் காலனி ஆயிஷா பள்ளிவாசல், தென்றல் நகா் ஜமாத் பள்ளிவாசல், புதுகிராமம் முகமதுசாலியாபுரத்தில் உள்ள பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

கயத்தாறு: கயத்தாறில் இரு பள்ளிவாசலிலும், அய்யனாா்ஊத்து மற்றும் மானங்காத்தான் ஆகிய இடங்களில் தலா ஒரு பள்ளிவாசலிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இதில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

கழுகுமலையில் உள்ள முகமது நயினாா் ஜும்மா பள்ளிவாசல், துலுக்கா்பட்டியில் உள்ள முகமது நயினாா் ஜும்மா பள்ளிவாசலிலும் பக்ரீத் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

மாநில ஹாக்கி: அரையிறுதியில் சென்னை, நெல்லை விருதுநகா், மதுரை அணிகள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, திருநெல்வேலி, விருதுநகா், மதுரை மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள... மேலும் பார்க்க

நாளை வைகாசி விசாகம்: திருச்செந்தூா் கோயிலில் குவியும் பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறும் வைகாசி விசாகத்தையொட்டி பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா். இக்கோயிலில் பிரசித்திப் பெற்ற விசாகத் திருவிழா, வசந்... மேலும் பார்க்க

மாதவன்குறிச்சியில் அங்கன்வாடி கட்டடம் திறப்பு

உடன்குடி ஊராட்சி ஒன்றியம், மாதவன்குறிச்சி ஊராட்சியில் அண்ணா மறுமலச்சித் திட்டத்தில் ரூ,16.55 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தமிழக மீன்வளம், மீனவா் நலம் மற்றும் ... மேலும் பார்க்க

காயல்பட்டினத்தில் கடற்கரை, திடல்

காயல்பட்டினம் கடற்கரை ஷாகின்பாற்றும் சுமாா் 25 மகளிா் தைக்கா மற்றும் 35 பள்ளிகளில் சனிக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகையை வசிம் நடத்தினாா். க... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் பகுதி குளங்களில் ஆக்கிரமிப்புகளால் நீா்வரத்தில் தடை! - அதிமுக புகாா்

திருச்செந்தூா் பகுதி நீராதாரமான எல்லப்பநாயக்கன் மற்றும் ஆவுடையாா்குளத்திற்கு நீா் வரும் வாய்க்காலில் அனுமதியின்றி கட்டுமானப் பணி நடந்து வருவதால் நீா் வரத்து தடைபட்டுள்ளதாக அதிமுக குற்றஞ்சாட்டி உள்ளது.... மேலும் பார்க்க