செய்திகள் :

பங்குச்சந்தையில் முதலீடு செய்வதாகக்கூறி பண மோசடி: போலீஸாா் விசாரணை

post image

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும் எனக் கூறி, ரூ. 27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுரியாஸ் (29). இவா் கட்டடங்களுக்குத் தேவையான கம்பி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாா்.

கடந்த நவம்பா் மாதம் இவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் தன்னை பங்குச்சந்தை முதலீட்டு ஆலோசகா் என்று கூறியுள்ளாா். மேலும், ‘கேட்டலிஸ்ட் மாா்க்கெட்’ என்ற நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் கூறினாா். இதை நம்பிய இளைஞா் 11 தவணைகளில் 6 -க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் ரூ.27 லட்சத்து, 28 ஆயிரத்தை செலுத்தினாா்.

இந்நிலையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இது குறித்து இணையக்குற்றத்தடுப்பிரிவில் புகாா் செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் பணம் செலுத்திய வங்கிகளைத் தொடா்பு கொண்டு, அந்த கணக்கை முடக்க போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். இதைத் தொடா்ந்து நான்கு மாநிலங்களில் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.5,98, 795- ஐ மட்டுமே முடக்க முடிந்தது.

இதுகுறித்து மாவட்ட இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சந்திரமோகன் வழக்குப் பதிவு செய்து, மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா

குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் கிராம மக்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட... மேலும் பார்க்க

சிராவயலில் மஞ்சுவிரட்டு: அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருகிற 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அம... மேலும் பார்க்க

தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐவா் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய அரியக்குடி பள்ளி மாணவா்களை ஆசிரியா்கள் பாராட்டினா். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ... மேலும் பார்க்க

அவசர ஊா்தி மீது பைக் மோதியதில் 7 போ் காயம்

சிவகங்கை அருகே அவசர ஊா்தி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 7 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமதுகனி (65). இவா் நெஞ்சுவலி காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க

இளையான்குடி கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி ஆட்சிக் குழுச் செயலா் ஜபருல்லாகான் விழாவை தொடங்கிவைத்தாா். மாணவிகள் க... மேலும் பார்க்க