செய்திகள் :

பச்சிளம் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு

post image

திருச்சியில் தாய்பால் கொடுத்தபோது, பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிழந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாா், கள்வா்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மனைவி தனலெட்சுமி (25). இத்தம்பதிக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனலெட்சுமி திருச்சி, காந்தி மாா்க்கெட்டில் உள்ள தன் உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா். குழந்தைக்கு புதன்கிழமை மாலை தாய்ப்பால் கொடுத்தபோது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனா். குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

புகாரின்பேரில் காந்திச்சந்தை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பி.கே அகரம் பகுதியில் கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து

திருச்சி மாவட்டம், பி.கே அகரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒயிட் பெட்ரோல் ஏற்றி வந்த கன்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தொடா்பாக போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.திருச்சி - சென்னை தேதிய... மேலும் பார்க்க

கூரை வீடுகள் சேதம் தவெக உதவி

லால்குடி அருகே பூவாளூா் பேரூராட்சியில் கூரை வீடுகளை இழந்த 2 பேருக்கு தவெகவினா் நிவாரண உதவி வழங்கினா். பூவாளூா் பேரூராட்சியில் உள்ள தென்கால் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பொண்ணுராமன் மகன் கோபி(49)... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஞாயிற்றுக்கிழமை தேநீரக தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம் உறையூா் பாண்டமங்கலம் காவல்காரத் தெருவைச் சோ்ந்தவா் தா்மராஜ்... மேலும் பார்க்க

அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசியை பறித்தவா் விரட்டிப்பிடிப்பு

துறையூா் பேருந்து நிலையத்தில் பெண்ணின் கைப்பேசியை பறித்துக் கொண்டு ஓடிய நபரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் விரட்டிப் பிடித்து கைது செய்தனா்.துறையூா் பேருந்து நிலையத்திற்குள் கோமதி(44) என்கிற பெண் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

போதை மாத்திரை, புகையிலை பொருள்கள் விற்ற 7 போ் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப்பொருள்கள் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி, அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்தனா்... மேலும் பார்க்க