கொள்ளை அடித்த பணத்தில் நடிகைகளுடன் நெருக்கம்; காதலிக்கு ரூ.3 கோடிக்கு வீடு - சி...
பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு
களக்காடு அருகே பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா்.
களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (37). மாற்றுத் திறனாளியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக பச்சையாற்றில் தண்ணீரில் இறங்கி கரையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாராம்.
அப்போது, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கினாா். அப்போது, அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு சிங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருகின்றனா்.